முல்லை கதிர் வீட்டிற்கு வரும் தனம், வீட்டு வேலைகளை தனியாக செய்ய கஷ்டப்படும் மீனா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா வீட்டில் வேலைகளை தனியாக செய்ய கஷ்டப்படுகிறார். பின் தனம் முல்லை கதிர் வீட்டிற்கு ஜீவாவுடன் செல்கிறார். முல்லை அவரை உள்ளே வர சொல்ல ஆனால் தனம் வர மறுக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா கண்ணனிடம் சூடு தண்ணீர் போட்டு கொடுக்க ஆனால் கண்ணனிற்கு அதை தூக்க கூட முடியவில்லை. பின் மீனாவே கொண்டு சென்று மூர்த்தியிடம் கொடுத்து மாத்திரை போட சொல்கிறார். பின் மீனா வீட்டில் வேலைகளை பார்க்க கஷ்டப்படுகிறார். கண்ணனிடம் இது பற்றி சொல்ல இதற்கு முன்னதாக முல்லை இருந்தார் அதனால் அவர் வேலையை பார்த்துக் கொள்வார் என சொல்கிறார். மீனா முல்லையை பற்றி பேசாதே என சொல்கிறார்
மறுபக்கம் தனமும் ஜீவாவும் மீனா வீட்டில் இருந்து வந்து கொண்டிருக்க உனக்கு வேலை இருக்கிறதா என தனம் கேட்கிறார். அப்போது தனம் கதிர் வீடு எங்கே இருக்கிறது என கேட்க ஜீவா முல்லை சொல்லுச்சே கோவில் அருகே இருப்பதாக என சொல்ல, ஜீவா கதிர் நண்பர் சேகரிடம் கேள்வி கேட்கிறார். அவர் வீடு எங்கே இருக்கிறது என சொல்ல ஜீவா இங்கே அருகே தான் இருக்கிறது என சொல்கிறார். தனம் சென்று பார்த்துவிட்டு வருவோம் என சொல்ல ஜீவா சரி என சொல்கிறார். அவனுக்கு எதாவது வாங்கி கொண்டு போவோம் என சொல்ல ஜீவா சரி என சொல்கிறார்,
TN Job “FB Group” Join Now
பின் வீட்டில் வேலைகளை செய்ய முடியவில்லை இந்த ஐஸ்வர்யா சீக்கிரம் வரலாம்ல என சொல்ல கண்ணன் அவ கடையில் இருக்கிறாள் என சொல்கிறார். பின் தனம் அக்காவிற்கு போன் செய் என சொல்ல ஆனால் தனம் போனை கொண்டுவரவில்லை. ஜீவாவிற்கு போன் செய்ய அவர் போனை எடுக்கவில்லை. பின் கண்ணன் நைட் சாப்பாடு செய்ய சொல்ல அக்கா வந்து செய்வார் என சொல்கிறார். அவங்க எங்கே போனாங்க என கேட்க கண்ணன் வந்துருவாங்க என சொல்கிறார்.
மீனா பாண்டியனுக்கு பால் கொடுத்து படுக்க வைக்க கயல் அழ தொடங்குகிறாள். உடனே மீனா சத்தம் போட்டு திட்ட மூர்த்தி ஏன் குழந்தையை திட்டுகிறாய் என கேட்கிறார். அப்போது மீனா நான் கயலை தான திட்டினேன் என சொல்கிறார். பின் கதிர் முல்லை புது வீட்டில் எல்லாம் செட் செய்து கொண்டிருக்க அப்போது கதிருக்கு போன் வருகிறது. அப்போதுதனமும் ஜீவாவும் வருகின்றனர். தனம் வீட்டை பார்த்து நன்றாக இருக்கிறது என சொல்கிறார்.
அப்போது முல்லை வந்து பார்த்துவிட்டு சந்தோசமாக உள்ளே கூப்பிடுகிறார். ஆனால் தனம் வர மறுக்கிறார். பின் வாங்கி கொண்டு வந்த பொருள்களை கொடுக்கிறார். உள்ளே வாங்க என சொல்ல ஆனால் தனம் பரவாயில்லை என சொல்கிறார். பின் தனம் மீனா வீட்டிற்கு தான் சென்று விட்டு வருகிறேன் என சொல்கிறார். பணம் எல்லாம் கொடுத்தாச்சு இனி யாருக்கும் நாம கடன் கொடுக்க தேவை இல்லை என சொல்கிறார்.
உடல்நிலை பற்றி ஜானகி அம்மாவிடம் சொன்ன பாரதி, ரோஹித் காரை எடுத்து சென்ற வெண்பா – இன்றைய எபிசோட்!
பின் முல்லை கதிரை கூப்பிட செல்ல தனம் அவர்களின் போட்டோவை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அவரால் அதை பார்க்க முடியாமல் தனமும் ஜீவாவும் கிளம்பிவிடுகின்றனர். கதிரிடம் வந்து முல்லை அக்கா வந்திருப்பதாக சொல்ல பின் கதிர் வேகமாக வந்து பார்க்கிறார். அப்போது தனமும் ஜீவாவும் கிளம்பிவிட முல்லை புது ட்ரெஸ் வாங்கி கொடுத்ததாக சொல்கிறார். அப்போது கதிர் அதை பார்த்து வருத்தப்பட்டு அழுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.