தமிழகத்தில் வருகிற மே 13ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் – அரிய வாய்ப்பை தவறவிடாதீர்கள்!
தமிழகத்தில் சிவகங்கை மாவட்டத்தில் வருகிற மே 13ம் தேதி அன்று தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கலந்து கொண்டு தங்களின் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்புகளை பெற்று கொள்ளலாம் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி. மதுசூதன் ரெட்டி அறிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
தமிழகத்தில் கொரோனா கால கட்டத்திற்கு பிறகு வேலைவாய்ப்பு குறைந்துள்ளது. அதனால் தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை அதிகப்படுத்த அரசு சார்பாக பல்வேறு இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு அதன் மூலமாக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் பணி நியமனம் பெற்றுள்ளனர். அந்த வகையில் வருகிற மே 13ம் தேதி அன்று சிவகங்கை மாவட்டத்தில் தமிழகத்தில் இயங்கி வரும் முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் இணைந்து நடத்தும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் – வானிலை அறிக்கை!
அதன்படி இந்த முகாம் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அன்று காலை 10.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இம்முகாமில் 10ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றவர்களும், பட்டப்படிப்பு முடித்தவர்களும் இதில் கலந்து கொள்ளலாம். மேலும் இம்முகாமில் ஐடிஐ, டிப்ளமோ உள்ளிட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கூட கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனால் இத்துறை சார்ந்த படிப்பை முடித்த வேலையில்லா இளைஞர்கள் இம்முகாமில் கலந்து கொள்வதன் மூலமாக தங்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற பணிகளை பெற்று கொள்ளலாம்.
Exams Daily Mobile App Download
மேலும் இம்முகாம் தொடர்பாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பி. மதுசூதன் ரெட்டி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது, இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்களின் குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டை, கல்விச்சான்றிதழ்கள் உள்ளிட்ட ஆவணங்களின் நகலுடன் வருகை தர வேண்டும். அத்துடன் இதில் பணி நியமனம் பெறுபவர்களுக்கு பதிவு மூப்பு ரத்து செய்யப்பட மாட்டாது என்றும் மாவட்ட ஆட்சியர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.