NEET தேர்வெழுதும் மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு – 20 நிமிடங்கள் கூடுதல் அவகாசம்!
NEET தேர்வில் மொத்தமாக 200 கேள்விகள் கேட்கப்படுவதால் அனைத்து கேள்விகளையும் வாசிக்கவே நேரம் போதவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் கேள்விகளை வாசிக்க மட்டுமே கூடுதலாக 20 நிமிடங்கள் வழங்கப்பட்டுள்ளது.
NEET தேர்வு:
தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) ஒவ்வொரு ஆண்டும் தேசிய தேர்வு முகமையால் (NTA) நடத்தப்பட்டு வருகிறது. இளங்கலை (NEET UG) மற்றும் முதுகலை (NEET PG) என மருத்துவ படிப்பு சேர்க்கைகளுக்கு தனித்தனியாக இரண்டு தேர்வாக நடத்தப்படும். இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வை ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதி வருகின்றனர். முதல் முயற்சியிலேயே எளிமையாக NEET தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியாது. அந்த அளவுக்கு NEET தேர்வு மிகவும் கடினமாக இருக்கும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – 15 முதல் 20 நிமிடங்கள் வரை யோகா இடைவேளை!
இந்தாண்டு நடக்க இருக்கும் இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் பெரிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது முதன்முறையாக NEET தேர்விற்கு 20 நிமிடங்கள் கூடுதலாக அவகாசம் கொடுக்கப்படவுள்ளனர். எப்போதும் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு 3 மணி நேரம் நடைபெறும். தற்போது கூடுதலாக 20 நிமிடங்கள் என 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறவுள்ளது. நீட் தேர்வில் மொத்தமாக 200 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். இதில் 180 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள் பதிலளித்தால் போதும்.
Exams Daily Mobile App Download
தேர்வில் அதிக எண்ணிக்கையிலான கேள்விகள் இடம்பெற்றிருப்பதால் 3 மணி நேரம் போதவில்லை என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதுமட்டுமல்லாமல் கேட்கப்படும் கேள்விகளை வாசிக்கவே 3மணி நேரம் முடிந்துவிடுகிறது என குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில் கேள்விகளை வாசிக்க மட்டுமே 20 நிமிடங்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்தாண்டு இளங்கலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு ஜூலை 17, 2022 அன்று நடைபெற இருக்கிறது.