தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – சனிக்கிழமை தோறும் விடுமுறை!
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு 1 முதல் 5ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு சனிக்கிழமை தோறும் விடுமுறை அளிப்பது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
கடந்த ஒரு சில வாரங்களாக தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. வழக்கமாக ஏப்ரல் மாத கடைசியில் அல்லது மே மாதத்தில் துவங்கும் வெப்பத்தின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தமிழகம் உள்ளிட்ட சில தென் மாநிலங்களில் கடந்த ஒரு சில வாரங்களாகவே கோடை வெப்பம் அதிகமாக காணப்படுகிறது. இந்த வெப்பத்தின் தாக்கம் அடுத்து வரும் நாட்களில் இன்னும் உயரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு பயிலும் அரசுப்பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இன்று முதல் வகுப்புகள்!
இதற்கிடையில் கோடை வெயிலின் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் உடலளவில் பெருமளவு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்க தமிழகத்தில் தற்போது நிலவும் கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்தது. இதனை கவனத்தில் கொண்ட அரசாங்கம், 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சனிக்கிழமைகள் தோறும் விடுமுறை அளிக்க பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் பெறப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சனிக்கிழமைகளில் விடுமுறை விட வேண்டும் என பெற்றோர்கள் எழுப்பி வந்த கோரிக்கையை ஏற்று சனிக்கிழமைகளில் விடுமுறை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் கோடை வெயிலின் காரணமாக ஆந்திரா, தெலுங்கானா உட்பட சில வட மாநிலங்களில் பள்ளிகள் செயல்படும் நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டு, காலை 7.30 மணி முதல் மதியம் வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.