TN TET தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு? வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தேர்வு மூலமாக நியமிக்கப்படுகிறார்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்த நிலையில் தற்போது பல்வேறு தரப்பினர் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகின்றனர்.
கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் குறைந்த நிலையில் பல்வேறு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி புரியும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை அண்மையில் வெளியிடப்பட்டது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 13 முதல் ஏப்ரல் 13 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இத்தேர்வுக்கு ஏராளமானோர் விண்ணப்பித்து வந்தனர்.
தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு கால அட்டவணை வெளியீடு!
அதனால் ஏப்ரல் 8ம் தேதி முதல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் சர்வர் பிரச்சனை ஏற்பட்டது. இதனால் விண்ணப்பங்களை பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு OTP அனுப்பப்படவில்லை. அத்துடன் விண்ணப்பிக்க கடைசி நாளான ஏப்ரல் 13ம் தேதி அன்று இணையதளம் முற்றிலுமாக செயல்படவில்லை. மேலும் இதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.ப. வெங்கடேசன், தமிழக வாலிபர் சங்கத்தினர் உள்ளிட்டோர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.
மேலும் இது தொடர்பாக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது, தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு கடைசி வாரத்தில் மட்டும் 1.5 இலட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். அத்துடன் சர்வர் பிரச்சனை காரணமாக நகர்ப்புற உள்ளவர்கள் இணையதள வசதிகளை பயன்படுத்தி விண்ணப்பித்திருக்க வசதிகள் உள்ளது. ஆனால் கிராமப்புற மக்களுக்கு சரியாக இணையதள வசதிகளை கிடைக்காததால் அவர்களால் விண்ணப்பித்திருக்க முடியாது. அதனால் சர்வர் பிரச்சனை சரி செய்து கால அவகாசத்தை நீட்டித்து விண்ணப்பிக்க முடியாதவர்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.