தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.5000 பரிசு – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் வருகின்ற ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்படும் என தருமபுரி ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.
அம்பேத்கர் ஜெயந்தி:
தமிழ் நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு பல சிக்கல்களை சந்தித்து தவித்து வந்தது. மேலும் நாட்டின் வர்த்தகம், பொருளாதாரம், உற்பத்தி போன்ற துறைகளை காட்டிலும் மீட்டெடுக்க முடியாத நாட்களாக மாணவர்களின் கல்வி சீரழிந்து விட்டது என்றே கூறலாம். மேலும் இந்த கொரோனாவின் முதல் கட்டம் மற்றும் இரண்டாம் கட்டத்தில் இருந்த போது பள்ளிகள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்பட்டு வந்தது. இந்த வகையில் மாணவர்கள் பாடத்தை கற்றாலும் பள்ளிக்கு சென்று அங்கு இருக்கும் சூழலில் பாடம் கற்பது மிகவும் சிறந்ததாக இருந்து வந்தது. இதனை இரண்டு வருடங்களாக பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் இழந்து வந்தனர். இந்நிலையில் சென்ற இறுதியில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 10,11, 12 வகுப்பு படிக்கும் மாணவர்கள் அடுத்தாக வரவுள்ள பொதுத் தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.
முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து தளர்வுகள் அமல்? நிர்வாகம் முடிவு!
இந்நிலையில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-22 இந்த கல்வி ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நமது நாட்டின் விடுதலைக்காக உழைத்த தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து, தற்போது தர்மபுரி மாவட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் பேச்சுப்போட்டி அரசு கலைக்கல்லூரியில் பள்ளி மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று முற்பகல் காலை 10 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கி நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து பரிசுகளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5000 இரண்டாம் பரிசாக ரூ.3000 மூன்றாம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பெறும். மேலும் அரசுப் பள்ளி மாணவர்கள் இருவருக்கு சிறப்பு பரிசாகத் தொகை ரூ.2000 வீதம் வழங்க பெறவுள்ளது. ஆக மொத்தம் 24,000 ரூபாய்க்கு பரிசுகள் வழங்கப்படும். மேலும், தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் இப்பேச்சு போட்டியில் பங்கேற்று பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” இவ்வாறு கூறப்பட்டுள்ளது.