தமிழகத்தில் நாளை (ஏப்ரல் 09) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின்பராமரிப்பு பணிகளுக்காக நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மின்பராமரிப்பு பணிகளுக்காக மாதம்தோறும் மின்தடை செய்யப்படுகிறது. மாவட்ட வாரியாக பகுதிகள் பிரிக்கப்பட்டு அட்டவணை தயார் செய்யப்பட்டு மின்வாரிய ஊழியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஒரு பகுதியில் பணி நடக்கும் போது மற்றொரு பகுதியில் மின்தடை ஏற்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளின் போது ஊழியர்களின் பாதுகாப்பு கருதி மின்தடை செய்யப்படுகிறது. மேலும், விபத்துகளை தவிர்க்கும் பொருட்டு பராமரிப்பு பணிகளின் போது மின்தடை செய்யப்ட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு பணி தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – முக்கிய தகவல் இதோ…!
முன்னதாக அறிவிக்கப்படுவதால் குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த மக்கள் மற்றும் தொழிலகங்கள் முன்னதாக தங்கள் பணிகளை திட்டமிட்டுக் கொள்ள முடியும். மேலும் மின் பராமரிப்பு பணிகளை துவங்குவதற்கு முன்னதாக அணைத்து மின் உபகாரணங்களும் முறையாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உயர் அதிகாரிகள் கட்டாயம் சோதனை செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதையும் மீறி ஏற்படும் விபத்துகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மட்டுமே பொறுப்பானவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு பணி தேர்வுக்கு தயாராகுபவர்களின் கவனத்திற்கு – முக்கிய தகவல் இதோ…!
இந்நிலையில் சத்தியமங்கலம் மின் கோட்டம் செண்பகபுதூர் துணை மின் நிலையத்தில் நாளை ஏப்ரல் 9ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் 3மதியம் மணி வரையிலும் நடக்க உள்ளது. இதனால் சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள காந்தி நகர், ரெங்கசமுத்திரம், பேருந்து நிலையம், கோணமலை, விஐபி நகர், செண்பகபுதூர், அரசூர் உக்கரம், அரியப்பம்பாளையம், சுண்டக்காம்பாளையம், சின்னாரிபாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், ஐய்யன்சாலை, தாண்டம்பாளையம் போன்ற பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.