சாலைகளில் வாகனங்களை தனிப்பாதையில் ஓட்டவில்லையெனில் ரூ.10,000 அபராதம் – டெல்லி அரசு அதிரடி உத்தரவு!
இந்தியாவில் பல்வேறு இடங்களில் தவிர்க்க முடியாத வகையில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டெல்லி அரசாங்கம் பேருந்து மற்றும் சரக்கு ரக வாகனங்களுக்கு என்று தனிப்பாதையை கொண்டு வர உள்ளது. மேலும் அனைத்து ஓட்டுனருக்கும் முக்கிய அறிவிப்பு ஒன்றை டெல்லி அரசாங்கம் வெளியிட்டுள்ளது.
ஓட்டுநர் கவனத்திற்கு
நாட்டில் பல்வேறு இடங்களில் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலை விதிகளை முறையாக பின்பற்ற படாதது இந்த விபத்திற்கு முக்கிய காரணமாக உள்ளது. மேலும் ஏராளமானோர் வாகனங்களை குடித்து விட்டு ஓட்டுவதாலும் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக டெல்லி அரசாங்கம் பேருந்து மற்றும் சரக்கு ரக வாகனங்களுக்கு என்று தனிப்பாதையை உருவாக்கியுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை – அமைச்சர் முக்கிய அறிவிப்பு!
இந்த தனிப்பாதை வருகிற ஏப்ரல் 1ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் நலன் கருதி இந்த தனிப்பாதையை டெல்லி அரசாங்கம் அமைத்துள்ளது. இதில் பேருந்துகளுக்கு என்று 15 தனிப்பாதைகள் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தனிப்பாதையில் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் மட்டுமே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மற்ற வாகனங்கள் இரவு 10 மணி முதல் காலை 8 மணி வரை செல்லலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தனிப்பாதையில் பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் 24 மணி நேரமும் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் அனைத்து ஓட்டுநர்களுக்கும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் கூறியதாவது, பேருந்துகள் அவற்றுக்கென ஒதுக்கப்பட்ட பாதையில் செல்ல வேண்டும். அத்துடன் விதியை மீறி பேருந்தை 2 வது முறையாக இயக்கினால் அந்த பேருந்து ஓட்டுநர் மீது அபாயகரமான முறையில் பேருந்தை ஒட்டியதாக வழக்கு பதிவு மேற்கொள்ளப்படும் என்று எச்சரித்துள்ளார்.