தமிழக அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை எதிர்பார்க்க என்ன காரணம்? நிதி ஆலோசகர் சொன்ன விளக்கம்!
நாடு முழுவதும் சில அரசுத் துறை ஊழியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டம் விலக்கி கொண்டுள்ள நிலையில், தமிழகத்திலும் அரசு ஊழியர்களின் ஒருமித்த விருப்பமாக இருக்கும், பழைய பென்ஷன் திட்டம் குறித்து நிதி ஆலோசகர் ஒருவர் விளக்கம் அளித்து இருக்கிறார்.
பழைய பென்ஷன் திட்டம்:
மத்திய அரசு சில துறை ஊழியர்களுக்கு என்.பி.எஸ் எனப்படும் பழைய ஓய்வு திட்டத்தை புதிய தேசிய பென்ஷன் திட்டம் விலக்கப்பட்டு நிபந்தனையுடன் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு ஊழியர்களுக்கு இன்னும் புதிய பென்ஷன் திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய பென்ஷன் திட்டமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே அரசு ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இது குறித்து, தமிழக அரசிடம் இருந்து எப்போது அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தமிழகத்தில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் – வலுக்கும் கோரிக்கை! அரசின் முடிவு என்ன?
அரசு ஊழியர்களை அந்த அளவிற்கு பேச வைக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி நிதி ஆலோசகர் ப.முகைதீன் சேக் தாவூது விளக்கம் ஒன்றை அளித்து இருக்கிறார். அதில் கடந்த 2004 முதல் அமலில் உள்ள புதிய பென்ஷன் திட்டத்தை விட, பழைய பென்ஷன் திட்டத்தில், பல விதமான நன்மைகள் இருப்பதாக, அரசு ஊழியர்கள் கருதுகின்றனர். குறிப்பாக, பழைய பென்ஷன் திட்டத்தின்படி, 10 ஆண்டுகளுக்கு குறையாமல் பணி நிறைவு செய்து ஓய்வு பெற்றவர்களுக்கு, ஓய்வூதிய பலன் உண்டு. அதுவே ஊழியர்கள் இந்த திட்டத்தை விரும்ப முக்கிய காரணமாக இருக்கிறது.
தமிழக ரயில்வே துறையில் தேர்வு, நேர்காணல் இல்லாமல் வேலை !
ஓய்வுபெறும் ஊழியரின் கடைசி மாத சம்பளத்தின் அடிப்படையில், மாதந்தோறும் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது மேலும், ஓய்வுபெறும் போது, ஓய்வுக்கால பணிக்கொடை மற்றும் ஓய்வூதிய, ‘கம்யூடேஷனும்’ கிடைக்கிறது. பல நல்ல அம்சங்கள் இருப்பதால் தான், தமிழக அரசு ஊழியர்கள் பழைய பென்ஷன் திட்டத்தை அதிகம் விரும்புகின்றனர். புதிய பென்ஷன் திட்டத்தின்படி, ஊழியர் தன் மாத சம்பளம் மற்றும் அவ்வப்போது பெறும் சம்பள நிலுவைத் தொகையில், 10 சதவீத தொகையை திட்டத்தில் செலுத்துகிறார். மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதியம் இதில் கிடைப்பதில்லை என்பதால் தான், பழைய பென்ஷன் திட்டத்தை பலரும் எதிர்பார்க்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.