பிறந்தநாள் விழாவில் லஷ்மிக்கு பாரதி கூறிய உண்மை, ஆனந்தத்தில் குடும்பத்தினர் – அடுத்த வார எபிசோட்!
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் அடுத்து நடக்கவிருக்கும் எபிசோட் பற்றிய தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து இந்த பதிவில் காணலாம்.
பாரதி கண்ணம்மா சீரியல்
‘கார்த்திகை தீபம்’ என்ற பெயரில் தெலுங்கில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலின் தமிழ் ரீமேக் தான் பாரதிகண்ணம்மா சீரியல். இந்த சீரியலில் கதாநாயகன் பாரதி தனது தோழியான வெண்பாவின் பேச்சை கேட்டு தனது மனைவி கண்ணம்மாவை சந்தேகப்படுகிறார். இதனை அறியும் கதாநாயகி கண்ணம்மா அவரை விட்டு பிரிந்து தனது மகளுடன் வாழ்ந்து வருகிறார். பாரதியும் தனது குழந்தை தான் ஹேமா என்று தெரியாமல் அவரை வளர்க்கிறார். தற்போது இந்த சீரியலின் முக்கிய கட்டமாக கண்ணம்மா தனது மகள் லட்சுமியிடம் அப்பாவைப் பற்றிய உண்மைகளை கூறுவேன் என்று கூறியிருக்கிறார்.
DNA டெஸ்ட் எடுத்த பாரதி, முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் – வெண்பா சொல்வது என்ன?
அதுவும் தனது பிறந்தநாளில் கூறுவேன் என்றும் கூறியிருக்கிறார். இதனால் லட்சுமி மட்டுமல்லாது மற்ற அனைவருமே மிகவும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை அடுத்து அடைத்த வார எபிசோடில் பாரதி கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவிற்கு வருகிறார். பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் அந்த விழாவினை பார்த்து பிரமித்து போகிறார். அப்போது லட்சுமி தனது அம்மாவிடம் அப்பா பற்றிய உண்மைகளை அனைவர் முன்பும் கூறவேண்டும் என்று கூறுகிறார். சரியாக அந்த நேரம் பார்த்து பாரதி லட்சுமியை அழைத்து அனைவரின் முன்பாகவும் கண்ணம்மா தான் உனக்கு அம்மா அப்பா எல்லாமே என்று கூறுகிறார்.
‘ராஜா ராணி 2’ ஷூட்டிங்கில் நிறைமாத கர்ப்பிணியாக வலம் வரும் ஆலியா மானஸா – ரசிகர்கள் ஷாக்!
அதோடு மட்டுமல்லாமல் ஒற்றுமையை மிகவும் கஷ்டப்பட்டு கண்ணம்மா வளர்ப்பதனால் இனி அப்பாவை பற்றி கேட்க கூடாது என்றும் கூறி விடுகிறார். கண்ணம்மா பற்றி மிகவும் பெருமையாகவும் கூறுகிறார். இதனை சுற்றி நின்று கேட்கும் அனைவரும் ஆனந்த கண்ணீர் வடிக்கின்றனர். இதனால் கண்ணம்மா மீண்டும் ஒருமுறை பாரதி பற்றிய உண்மைகளை யாருக்கும் தெரியாமல் மறைத்து விடுகிறார். இது போன்ற காட்சிகள் தான் இனி வரும் நாட்களில் ஒளிபரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணம்மா பாரதி பற்றிய உண்மைகளை கூறாமல் இந்த வாரமும் இருப்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.