தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை பற்றி இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டாயம் பொதுத்தேர்வு:
தமிழகத்தில் கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா நோய் தொற்றின் தாக்கம் அதிகரித்து வந்தது. இதன் பாதிப்பின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் 2020ம் ஆண்டு பொதுத்தேர்வில் 12ம் வகுப்பு மாணவர்களில் ஒரு சில பாடங்கள் தவிர மற்ற பாடங்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்படவில்லை. இதேபோல், 2021ம் ஆண்டு பொதுத்தேர்வுகளும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வில்லை.
மார்ச் 7 முதல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!
இதனால் மாணவர்களுக்கு அக மதிப்பெண் அடிப்படையில் இறுதி மதிப்பெண்கள் வழங்கப்பட்டது. மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையின் போதும் அரசு பணிகளின் நியமனத்தில் போதும் பொதுத்தேர்வு மதிப்பெண்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் அரசு வழங்கிய மதிப்பெண்கள் மூலம் பலரின் எதிர்காலம் பாதிக்கப்பட கூடும் என்று பலரும் அரசிடம் வலியுறுத்தி வந்தனர். இதனால் 2021- 2022ம் கல்வி ஆண்டின் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொது தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில், பொதுத்தேர்விற்கு முன்னதாக மாணவர்களுக்கு தேர்வு அச்சத்தை போகும் வகையில், இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தபட இருப்பதாக அரசு அறிவித்தது. அதன்படி, பிப்ரவரி 9-ம் தேதிமுதல் இந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முதல் திருப்புதல் தேர்வுகள் தொடங்கி நேற்றுடன் நிறைவடைந்தது. ஆனால் திருவண்ணாமலையில் இரண்டு பள்ளிகளில் அரசு வழங்கிய திருப்புதல் தேர்வு வினாத்தாள் லீக் ஆனது, இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – பிட்மென்ட் காரணி உயர்வு? முழு விவரம் இதோ!
இதற்காக திருவண்ணாமலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் குற்றச்சாட்டிக்குள்ளான இரு தனியார் பள்ளிகளுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருப்புதல் தேர்வு மாணவர்களை தயார்படுத்த மட்டுமே நடத்தப்படுகிறது. இதன் மதிப்பெண்கள் தேர்விற்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது. கட்டாயம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.