மார்ச் 7 முதல் பொறியியல் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மார்ச் 7ஆம் தேதி முதல் நேரடி வகுப்புகள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 22 முதல் செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரடி வகுப்பு:
தமிழகத்தில் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கம் காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கால் பள்ளி, கல்லூரிகளுக்கு ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் கல்லூரி மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வை நேரடி முறையில் நடத்துவதில் சிக்கல் எழுந்தது. வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். தற்போது கொரோனா அச்சுறுத்தலால் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகளை நடத்த உயர் கல்வித்துறை வழங்கியது. மேலும் ஆன்லைன் மூலம் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது.
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 10 விதமான பொருட்களுடன் பொங்கல் பரிசு – விநியோகம் தொடக்கம்!
இதனையடுத்து கடந்த 1ம் தேதி முதல் அறிவியல், கலை, பொறியியல் கல்லூரிகளில் இறுதி ஆண்டு மாணவர்களை தவிர்த்து மற்ற ஆண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வு நடைபெற தொடங்கியது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கீழ் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் மார்ச் 7ஆம் தேதி முதல் பொறியியல் 2,3 மற்றும் 4ம் ஆண்டு மானவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
TNPSC முக்கிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பிக்க இன்னும் 4 நாட்கள் மட்டுமே..!
மேலும் பி.இ, பி.டெக் மாணவர்களுக்கு மார்ச் 7ஆம் தேதி முதல் ஜூன் 11ஆம் தேதி வரை நேரடி வகுப்புகள் நடைபெறும். அதன் பிறகு செய்முறைத் தேர்வுகள் நடத்தப்படும் . எம்இ, எம்டெக், எம்ஆர்க் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ஏப்ரல் மாதம் 4ஆம் தேதி தொடங்கி ஜூலை மாதம் 4 ஆம் தேதி வரை நடைபெறும். ஜூலை மாதம் 18ஆம் தேதி நடப்பு ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.