அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை – முதல்வர் உத்தரவு!

0
அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை - முதல்வர் உத்தரவு!
அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை - முதல்வர் உத்தரவு!
அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு ஒருநாள் விடுமுறை – முதல்வர் உத்தரவு!

குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதியான இன்று டெல்லியின் அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிப்பை முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

விடுமுறை அறிவிப்பு:

நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று பரவல் அதிகரித்து வந்ததை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முன்னதாக டெல்லி முழுவதும் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டது. நோய் தொற்று பாதிப்புகள் குறைந்த பிறகு டெல்லி பள்ளிகள் அனைத்து வகுப்புகளுக்கும் பிப்ரவரி 14ம் தேதி அன்று மீண்டும் திறக்கப்பட்டன. நர்சரி முதல் வகுப்பு 8 வரை பிப்ரவரி 14 முதலும், 9 முதல் 12 வகுப்புகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையத்தால் நடத்தப்பட்ட கோவிட் ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு பிப்ரவரி 7ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – இன்று முதல் மழலையர் பள்ளிகளை திறக்க அனுமதி!

சந்த் ரவிதாஸ் ஒரு இடைக்கால கவிஞர், சீர்திருத்தவாதி மற்றும் பக்தி இயக்கத்தின் உறுப்பினர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் தனது வசனங்கள் மற்றும் போதனைகள் மூலம் சாதி அடிப்படையிலான சமூகப் பிரிவினைக்கு எதிரான செய்தியைப் பரப்புவதில் கவனம் செலுத்தினார். குரு ரவிதாஸ் ஜெயந்தி பிப்ரவரி 16ம் தேதியான இன்று சிறப்பிக்கப்படுகிறது. டெல்லி முழுவதும் இந்த நாள் மிகவும் விமரிசையாக சிறப்பிக்கப்படுகிறது. ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு மீண்டும் அமல் – தொடக்க பள்ளிகளை திறக்க அனுமதி!

குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிப்ரவரி 16ஆம் தேதி அனைத்து பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு டெல்லி அரசு விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை தொடர்பான அறிவிப்புகள் நேற்றிரவு, பிப்ரவரி 15, 2022 வெளியிடப்பட்டது. அதில், குரு ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியின் NCT அரசின் கீழ் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் பிப்ரவரி 16, 2022 புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிப்பதில் தில்லியின் தேசியத் தலைநகர் பிரதேச அரசின் லெப்டினன்ட் கவர்னர் மகிழ்ச்சியடைகிறார் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. டெல்லி கல்வி இயக்குனரகம், அனைத்து அரசு இணைப்புப் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை குறித்து அறிவிக்க சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!