தமிழகத்தில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – பிப்.16 முதல் கூடுதல் தளர்வுகள் அமல்!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து தற்போது மேலும் சில தளர்வுகளை அறிவித்து மார்ச் 2ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கூடுதல் தளர்வுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்தது. இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு ரத்து உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் 1 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. அத்துடன் கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தளர்வுகள் அனைத்தும் பிப்ரவரி 15ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் நாளை மறுநாள் (பிப்.16) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
இதனை தொடர்ந்து தற்போது முடிவடைய உள்ள நிலையில் மேலும் சில தளர்வுகளை பற்றி உயர் அதிகாரிகள் மற்றும் மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதல்வர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் முடிவில் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக பொது இடங்களில் மக்கள் கட்டாயமான முறையில் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைத்து கடைகளின் நுழைவு வாயிலில் கை சுத்திகரிப்பான்கள் வைத்திருக்க வேண்டும். அத்துடன் கடைக்கு வருகை புரியும் வாடிக்கையாளர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
TNPSC தேர்வாணையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – தவறாமல் படிங்க!
மேலும் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் பொதுமக்கள் கூட்டம் கூட தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்ச்சிகளில் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் நர்சரி பள்ளிகள் மற்றும் மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் திறக்கவும் அத்துடன் பொருட்காட்சிகள் நடத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் அனைத்தும் வருகிற மார்ச் 2ம் தேதி வரை பின்பற்றப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.