SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆன்லைன் மூலம் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகள்!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் எளிதாக ரிக்கரிங் டெபாசிட் கணக்கை எளிதாக தொடங்கலாம். அதற்கான இணையதள வழிமுறைகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
எஸ்பிஐ:
இந்தியாவின் மிக பெரிய வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேமிப்பு மட்டும் கடன் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் எஸ்பிஐ வீட்டு கடன் மற்றும் வாகன கடன்களை வழங்குகிறது. எஸ்பிஐயின் யோஜனா ஆப் மூலம் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்கள் வீட்டு கடன், கல்விக் கடன், வாகனக் கடன், கிரெடிட் கார்டு, காப்பீடு திட்டங்கள், ரயில் டிக்கெட் புக் செய்தல் போன்றவைகளை செய்யும் வசதி உள்ளது. அதனை தொடர்ந்து தற்போது வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மூலம் எளிதாக ரிக்கரிங் டெபாசிட் கணக்கை தொடங்கலாம்.
இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ஊரடங்கு அமல் – மாநில அரசு உத்தரவு!
RD கணக்கில் டெபாசிட் செய்பவர் மூன்று மாதங்கள் தொடர்ந்து தவணையை சரியான நேரத்தில் செலுத்தவில்லை என்றால், ரூ.10 சேவை அபராதம் விதிக்கப்படும். RD கணக்கில் தவணை தொகையை செலுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டால், ஒவ்வொரு மாதமும் ரூ.100 அல்லது 150 வரை அபராதம் விதிக்கப்படும். முதிர்வுத் தொகை வாடிக்கையாளர்கள் செலுத்தும் முதலீட்டை பொறுத்து மாறுபடும். எஸ்பிஐ வங்கியில் RD கணக்கு தொடங்கும் வழிமுறைகளை தெரிந்து கொள்வோம்.
RD கணக்கு தொடங்கும் முறைகள்:
- முதலில் எஸ்பிஐ வங்கி இணையதளத்தில் நெட்பேங்கிங் வசதியை தேர்ந்தெடுத்து உங்கள் யூசர் ஐடி மட்டும் பாஸ்வோர்டை உள்ளிடவும்.
- அதில் RD கணக்கு என்பதைக் கிளிக் செய்து பணத்தை மாற்ற விரும்பும் கணக்கைத் தேர்ந்தெடுக்கவும்.
- பிறகு அதில் தொகையை உள்ளிட்டு, முதிர்வு காலத்தை தேர்ந்தெடுக்கவும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பாக்சை டிக் செய்யவும்.
- சமர்ப்பி என்ற பட்டனை கிளிக் செய்து பின் அடுத்த பக்கத்தில் அதையே ‘உறுதிப்படுத்து’ என்பதைக் கிளிக் செய்யவும்.
Velaivaippu Seithigal 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும் To Join => Whatsapp கிளிக் செய்யவும் To Join => Facebook கிளக் செய்யவும் To Join => Telegram Channel கிளிக் செய்யவும்