தமிழக கூட்டுறவு வங்கிகளில் பெற்ற நகைக்கடன் தள்ளுபடி – சூப்பர் அறிவிப்பு வெளியீடு!
கோவை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் 5 சவரன் அளவிலான தங்க நகைகள் அடகு வைத்திருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நகைக்கடன் தள்ளுபடி:
தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 5 சவரன் அளவுள்ள நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நகைக்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் படி தற்போதைய நிதி நெருக்கடி நிலையில் அனைவரது கடன்களையும் தள்ளுபடி செய்ய முடியாத நிலையில் அரசு நிபந்தனைகளில் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு மட்டும் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டது.
இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
இதனையடுத்து நகைக்கடன் பெற தகுதியானவர்களை கண்டறிய கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் வைத்தவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்த படி நகைக்கடன் தகுதியானோர் மற்றும் தகுதியற்றோர் பட்டியலும் வெளியிடப்பட்டது.அதில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வைத்தவர்களில் 10,18,066 பேர் கடன் தள்ளுபடிக்கு தகுதியானவர்களாக உள்ளனர். மீதம் 35,37,693 பேர் தகுதியற்றவர்களாக உள்ளனர். இந்த நிலையில் நகைக்கடன் தள்ளுபடி திட்டத்தை உடனடியாக தொடங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? விரைவில் அட்டவணை வெளியீடு!
இதன் அடிப்படையில் கோவை மாவட்ட காரமடை ஊராட்சி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் 5 பவுனுக்கு மிகாமல் நகை அடகு வைத்திருந்த விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடிக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். நகைக் கடன் தள்ளுபடியில் நிபந்தனைகள் மற்றும் அறிவுரைகளை முறையாகப் பின்பற்ற கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.