தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? விரைவில் அட்டவணை வெளியீடு!

0
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? விரைவில் அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? விரைவில் அட்டவணை வெளியீடு!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? விரைவில் அட்டவணை வெளியீடு!

தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறந்ததை தொடர்ந்து 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இதையடுத்து பொது தேர்வு ஏப்ரலில் நடத்த ஆலோசனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பொது தேர்வு

தமிழகத்தில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைந்ததை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டன. மேலும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கட்டாயமாக பொது தேர்வு நேரடி முறையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதையடுத்து தென்னாப்பிரிக்காவில் உருவான ஒமைக்ரான் தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி பாதிப்பை ஏற்படுத்தி வந்தது. அத்துடன் தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் அதிகரிக்க தொடங்கியது.

நாளை (பிப்.14) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!

அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. அத்துடன் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகள் ஜனவரி 31ம் தேதி வரை மூடப்பட்டது. இதையடுத்து கொரோனா பரவல் குறைந்து வந்ததால் கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை பொது தேர்வு போல நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – விரைவில் சம்பள உயர்வு!

மேலும் 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 28 முதல் ஏப்ரல் 5 தேதி வரை நடைபெற உள்ளது. அத்துடன் ஏப்ரல் இறுதி வாரத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதனை தொடர்ந்து மே 1ல் மே தினம் மற்றும் மே 2 அல்லது 3ல் ரம்ஜான் பண்டிகை விடுமுறை நாட்கள் வருவதால் அதற்கு முன் தேர்வை முடிக்கவும் திட்டமிட்டுள்ளது. இதையடுத்து தமிழக மாணவர்கள் நீட், ஜே.இ.இ உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக மே மாதம் கோடை விடுமுறை கிடைக்க வேண்டும். அதனால் ஏப்ரல் மாதத்தில் பொது தேர்வு நடத்தி முடிக்க வேண்டும் என்று கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!