இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை ஊரடங்கு அமல் – அரசின் புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
உத்தரபிரதேச மாநிலத்தின் கொரோனா கால ஊரடங்கு கட்டுப்பாடுகள் முன்னதாக கடுமையாக விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்புகள் குறைந்துள்ளதால் அதில், தளர்வுகளை அளித்து உத்தரவிட்டுள்ளது.
கட்டுப்பாடுகளில் தளர்வுகள்:
உத்தரபிரதேச மாநிலத்தின் கௌதம் புத் நகரில் வெள்ளிக்கிழமை நிலவரப்படி புதிதாக 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 223 பேர் நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில் தற்போது செயலில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 844 ஆக உள்ளது என்று அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு ஜனவரி 5 ஆம் தேதிக்குப் பிறகு மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முதல் முறையாக 1,000 க்கும் குறைவாக பதிவாகி உள்ளது. கோவிட்-19 பாதிப்பால் மொத்தம் 488 இறப்புகள் கவுதம் புத்த நகரில் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஏப்ரலில் பொதுத்தேர்வு? விரைவில் அட்டவணை வெளியீடு!
தற்போது நகரில் கொரோனா பாதிப்புகள் குறைந்து உள்ளதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதனால் கௌதம் புத்த நகர் மாவட்ட நிர்வாகம் வெள்ளிக்கிழமை இரவு ஊரடங்கு உத்தரவு நேரத்தை குறைத்தல் மற்றும் ஜிம்கள் மற்றும் நீச்சல் குளங்களை மீண்டும் திறப்பது போன்ற கோவிட் கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவித்தது. மேலும், செயலில் உள்ள COVID-19 வழக்குகள் 1,000 க்கும் குறைவாக இருப்பதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளை (பிப்.14) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
இரவு ஊரடங்குச் சட்டம் முன்னதாக இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இருந்தது. தற்போது இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் வழக்குகளின் எண்ணிக்கை 1,000 க்கும் குறைவாக இருப்பதால், முன்பு இருந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 12 முதல் நீக்கப்படும் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் சுஹாஸ் எல் யதிராஜ் கூறினார். உணவகங்கள், ஜிம்கள், திரையரங்குகள் இப்போது திறக்கப்படலாம் என்றும் பொது இடங்களில் கோவிட் தடுப்பு விதிமுறைகளை மக்கள் முழுமையாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தாரோடுள்ளது.