நாளை (பிப்.14) பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
கோவாவில் பிப்ரவரி 14 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மேலும் இந்த தேர்தலை முன்னிட்டு 14 ஆம் தேதி அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை விடப்படுவதாக கோவா அரசு அறிவித்துள்ளது.
பொது விடுமுறை:
கோவா மாநிலத்தில் 40 சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நாளை (பிப்ரவரி 14) ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. கோவாவில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 332 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இந்த ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தலில் பெறப்பட்ட மொத்த வேட்புமனுக்கள் 587 ஆகும். ஆளும் பாரதிய ஜனதா கட்சி (BJP), காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சி (AAP) , மற்றும் அறிமுக திரிணாமுல் காங்கிரஸ் (TMC) ஆகிய 4 முக்கிய கட்சியினர் தற்போதைய தேர்தலில் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி அன்று நடைபெறும்.
ESIC தமிழ்நாடு ரூ.81,100/- ஊதியத்தில் Clerk வேலைவாய்ப்பு !
நாளை (பிப்ரவரி 14 ) அனைவரும் வாக்களிக்க ஏதுவாக கோவா அரசு தேர்தல் பொது விடுமுறை என அதிகாரபூர்வ அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கோவா சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை ஆம் ஆத்மியும், பாஜகவும் அறிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி இன்னும் அறிவிக்கவில்லை. தற்போது முதல்வராக உள்ள பிரமோத் சாவந்தை முதல்வராக பாஜக முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிப்பதாக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை ஆகும்.
தமிழகத்தில் பிப்.15 முதல் மேலும் 15 நாட்களுக்கு ஊரடங்கு – புதிய தளர்வுகள் அறிவிப்பு!
கோவாவில் உள்ள தொழில்துறை தொழிலாளர்கள், அரசு துறைகள் மற்றும் மாநில அரசு தொழில்துறை துறைகளின் தினசரி ஊதிய தொழிலாளர்கள், கோவாவில் உள்ள தனியார் நிறுவனங்களின் தொழிலாளர்கள், தினசரி ஊதியம் / சாதாரண தொழிலாளர்கள், வணிகம், வர்த்தகம் ஆகியவற்றில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, தொழில்துறை நிறுவனங்கள் அல்லது வேறு ஏதேனும் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 20ம் தேதி நடைபெற உள்ள நிலையில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறையை அரசு அறிவித்துள்ளது