அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சம்பள உயர்வு – கோரிக்கை முன்வைப்பு!
ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஊதிய உயர்வு கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் 500 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
ஊதிய உயர்வு:
உலகம் முழுவதும் கடந்த 2019ம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் தொற்று தீவிரமெடுத்து பரவி அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அனைத்து நாடுகளும் ஊரடங்கு மட்டும் கட்டுப்பாடுகளை விதித்தது. அதனை தொடர்ந்து மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்த கொரோனா பரவலால் அதிக பாதிக்கப்பட்டது. ஆசிரியர்களும், மாணவர்களும் தான் கொரோனா அச்சத்தால் நேரடி வகுப்புகளை நடத்த தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டது.
Reliance Jio பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ் – ரூ.200க்கும் குறைவான ரீசார்ஜ் திட்டங்கள்!
மேலும் இந்தியாவில் அடுத்தடுத்து தீவிரம் எடுத்து பரவிய கொரோனா அலைகள் பள்ளிகளை திறக்க முடியாத சூழலை உருவாக்கியது. இதனால் ஆசிரியர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறக்காததால் வேலைகளை இழந்துள்ளதாக கூறுகின்றனர். பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டதால் பெரும்பாலான ஆசிரியர்களுக்கு பள்ளி நிர்வாகங்கள் ஊதியம் தரவில்லை இதனால் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டனர். இந்த நிலையில் தென்னாப்பிரிக்காவில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
பிப்.20ம் தேதி மாநிலம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அறிவிப்பு – அரசு அதிரடி உத்தரவு!
தென்னாப்பிரிக்காவில் ஜிம்பாப்வே நாட்டில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு 100 அமெரிக்க டாலர்கள் ஊதியமாக வழங்கப்பட்டு வருகிறது. இது இந்திய மதிப்பில் ரூ.7500 ஆகும். இந்த நிலையில் ஊதிய வேண்டி கோரிக்கை விடுத்ததை அடுத்து 20 சதவீத ஊதிய உயர்வு அளிக்க அரசு முன்வந்தது. அதனால் ஆசிரியர்கள் அதை ஏற்கவில்லை மாத ஊதியத்தை 500 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க வேண்டும் என்றும் கூறினார். ஊதிய வேண்டி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் மூன்று மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாகவும், அவர்களது சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளதாகவும், ஜிம்பாப்வே தொடக்க மற்றும் இடைநிலைக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.