தேர்வு நேர்காணல் இல்லாமல் ரயில்வேயில் வேலை 2022 – 750+ காலிப்பணியிடங்கள்..!
கிழக்கு கடற்கரை ரயில்வே (ECR) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Apprentice பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் 07.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கிழக்கு கடற்கரை ரயில்வே (ECR) |
பணியின் பெயர் | Apprentice |
பணியிடங்கள் | 756 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.03.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ரயில்வே பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Apprentice பணிக்கென 756 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Carriage Repair Workshop, Mancheswar, Bhubaneswar – 190 பணியிடங்கள்
Khurda Road Division – 237 பணியிடங்கள்
Waltair Division – 263 பணியிடங்கள்
Sambalpur Division – 66 பணியிடங்கள்
இரயில்வே கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 15 என்றும் அதிகபட்சம் 24 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு; வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
இரயில்வே ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே விண்ணப்ப கட்டணம்:
SC, ST, PwD மற்றும் பெண்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இரயில்வே தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் தகுதியின் அடிப்படையில் (merit list) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
சிறந்த coaching centre – Join Now
இரயில்வே விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 07.03.2022 ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.