பாராசிட்டமால் மாத்திரைகளை உட்கொள்வோர் கவனத்திற்கு – மருத்துவ நிபுணர்களின் எச்சரிக்கை!
பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாராசிட்டமால்:
உலகளவில் அதிக மக்களால் பாராசிட்டமால் மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தலைவலி, காய்ச்சல், போன்ற உடல் பாதைகளுக்கு முதல் கட்டமாக பாராசிட்டமால் மாத்திரைகள் பயன்படுத்தப்படுகிறது . உடல் வெப்ப நிலையை சீராகவும், சோர்வு, சளி தொந்தரவு போன்றவற்றிற்கு பாராசிட்டமால் உட்கொள்கிறார்கள். மக்கள் சாதாரணமாக தங்களாவே மருந்து கடைகளில் பாராசிட்டமால் மாத்திரைகளை கேட்டு பெறுகின்றனர். மருத்துவர்களும் நாம் காய்ச்சல், உடல் சோர்வு என்று சொல்லும் போது பாராசிட்டமால் மாத்திரைகளையே பரிந்துரைக்கின்றனர்.
பிப்.14ம் தேதி அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை – முக்கிய அறிவிப்பு!
அந்தளவிற்கு இது நோயாளிகளுக்கு பாதுகாப்பான மருந்து. ஆனால் இதனை ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் எடுத்து கொள்ளும் போது தீமை விளைவிக்கிறது. இந்த பாராசிட்டமால் மாத்திரையை உட்கொள்ளும் போது நோயாளிகளுக்கு உடனடி தீர்வு கிடைக்கிறது. அதனால் மருத்துவரிடம் சிலர் செல்வதே இல்லை. மருந்து கடைகளிலும் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைக்காரர்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை விற்பனை செய்கின்றனர். மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எடுத்துக் கொள்வது சிலருக்கு ஒவ்வாமை மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
அடுத்த 3 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு – ஹிஜாப் எதிர்ப்பு விவகாரம்!
இந்த நிலையில் தற்போது நடத்தப்பட்ட ஆய்வில் பாராசிட்டமால் மாத்திரைகளை தினசரி எடுத்துக் கொள்வது ஆபத்தானது என நிபுணர்கள் கூறுகின்றனர். பாராசிட்டமால் மாத்திரைகளை தினந்தோறும் பயன்படுத்துவது ரத்த அழுத்தத்தை அதிகரிப்பதுடன், நெஞ்சுவலியையும் ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். நோயாளிகளுக்கு இம்மாத்திரைகளை பரிந்துரைக்கும் போது மருத்துவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் பிரிட்டன் ஆராய்ச்சியாளர்களும் அறிவுறுத்தியுள்ளனர்.