TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் குறித்த முக்கிய அறிவிப்பு – தேர்வு தேதி மாற்றம்!
தமிழகத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதால் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான கணினித்தேர்வு வருகிற 19ம் தேதி நடைபெறாது என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
ஆசிரியர் தேர்வு:
தமிழகத்தில் TNPSC தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருகிறது.அதனை தொடர்ந்து அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கான தேர்வு இந்த மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டபோது பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இந்த நிலையில் முதல் கட்டமாக அரசு மேல்நிலை பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரம்பும் பொருட்டு தேர்வை நடத்துவதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலத்தில் பிப்.15ம் தேதி முதல் முழு ஊரடங்கு ரத்து – அரசு அதிரடி அறிவிப்பு!
தற்போது பாதிப்பு எண்ணிக்கைகள் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திருப்பி வரும் நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 கணினி பயிற்றுநர்கள் நிலை ஆகிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் தொடர்ந்து பிப்ரவரி 20ம் தேதி வரை காலை மாலை என இரு வேலைகளிலும் தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்தது. இந்த நேரத்தில் பிப்ரவரி 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
TCS நிறுவனத்தில் பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
தமிழகத்தில் வரும் பிப்ரவரி 19ம் தேதி நகர்புறங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு முதுகலை ஆசிரியர்களுக்கு 19ம் தேதி நடைபெற உள்ள கணினி தேர்வு அன்று நடைபெறாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் தேர்வர்கள் தங்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டை இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.