IPL அப்டேட்ஸ் – சுரேஷ் ரெய்னா முதல் தினேஷ் கார்த்திக் வரை! விற்பனையாகாமல் போக வாய்ப்புள்ள வீரர்கள்!
இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் IPL தொடருக்கான ஏலம் இம்மாதம் 12,13 ஆம் தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ள நிலையில் மெகா ஏலத்தில் அதிக தொகைக்கு ஏலம் போக வேண்டும் என்று சில வீரர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் 2 கோடி ரூபாய் அடிப்படை விலை கொண்டு 5 இந்திய வீரர்கள் தனது பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
IPL மெகா ஏலம்:
உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் வரவிருக்கும் மெகா ஏலத்திற்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்ட மெகா ஏலம் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் பெங்களூரில் தொடங்குகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு IPL போட்டிகளை இந்தியாவிலேயே நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இதனை சமீபத்தில் பேட்டியளித்த பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி IPL போட்டிகள் மகாராஷ்டிரா – மும்பை மற்றும் புனேவில் நடைபெறும் என்று உறுதி செய்தார் . எனினும், நாக் அவுட் போட்டிக்கான இடங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு மீண்டும் முழு ஊரடங்கு அமல்? அரசு எடுக்கப்போகும் முடிவு!
இந்த ஆண்டு IPL யில் பங்கேற்கும் பத்து அணிகள் பிப்ரவரி 12 ஆம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தில் கலந்து கொள்ளவுள்ளதால், 8 அணிகளால் தக்கவைக்கப்படாத வீரர்களை எந்தெந்த அணிகள் தேர்வு செய்யும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதே போல கடந்த சில மாதங்களில் பல இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் சிறப்பாக ஆடி வருவதால், அதில் சில முக்கிய வீரர்களை அணியில் சேர்க்க, நிச்சயம் அனைத்து அணிகளும் குறி வைக்கும் என்பதால் இரண்டு நாட்களும் ஐபிஎல் ஏலம் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து 2 கோடி ரூபாய் அடிப்படை விலை கொண்டு 5 இந்திய வீரர்கள் தனது பெயரை மெகா ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி சுற்றறிக்கை – தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்!
IPL ஏலத்தில் பங்கு பெற வீரர்களுக்கு அடிப்படை விலை 2 கோடி ஆகும். அந்த வகையில் கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்காக விளையாடிய தினேஷ் கார்த்திக் , முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சுரேஷ் ரெய்னா , இந்திய டெஸ்ட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் , முன்னாள் மும்பை அணி பௌலர் குர்னால் பாண்டியா , மற்றும் அம்பதி ராயுடு ஆகியோர் தங்களது பெயரை அடிப்படை விலைக்கு IPL மெகா ஏலத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த 5 வீரர்கள் ஏலத்தில் விற்கப்படாமல் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.