தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி சுற்றறிக்கை – தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்!

0
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி சுற்றறிக்கை - தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி சுற்றறிக்கை - தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்!
தமிழக கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி சுற்றறிக்கை – தேர்தல் விதிகளை மீறுவதாக புகார்!

தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகைக்கடன் தள்ளுபடி சான்று வழங்க உள்ளதாக சுற்றறிக்கை வெளியகியுள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.

நகைக்கடன் தள்ளுபடி:

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பாக கூட்டுறவு வங்கிகள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் 5 சவரன் வரை நகைக்கு வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதற்கான அரசாணை 2021 நவம்பர் 1 ல் வெளியிடப்பட்டது. மேலும் இந்த நகைக்கடன் தள்ளுபடி பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையில் செய்யப்படும் என அறிவித்தார். இந்த வகையில் 13 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி சலுகை கிடைக்கும் என்றும், 35 லட்சம் பேருக்கு கிடைக்காது என்றும் தகவல் வெளியானது.

குளிர்கால ஒலிம்பிக் 2022 – 45 வீரர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி! ரசிகர்கள் அதிர்ச்சி!

மேலும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தொடர்பான பணிகள் முடிந்த நிலையில், நகைகடன் தள்ளுபடி பெற்ற பயனாளிகளுக்கு நகையும், கடன் தள்ளுபடி சான்றும் வழங்கப்படவில்லை. இந்த நிலையில் பயனாளிகள் வங்கிகளுக்கு வந்து நகைகளை கேட்டு தகராறு செய்தனர் . இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், மண்டல இணை பதிவாளர்களுக்கு நேற்று முன்தினம் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும் அந்த சுற்றறிக்கையில் கூட்டுறவு வங்கி பணியாளர் அடங்கிய குழு, இந்த மாதம் 11ம் தேதிக்குள் நகை கடன் தள்ளுபடிக்கு தகுதி வாய்ந்த, தகுதியற்றவர்களின் பட்டியலை தயார் செய்து, சங்கங்களுக்கு வழங்க வேண்டும்.

சென்னைவாசிகள் கவனத்திற்கு – பிப்.16 முதல் புத்தக கண்காட்சி! நாளை டிக்கெட் முன்பதிவு!

இதனை தொடர்ந்து நகைக்கடன் தள்ளுபடி சான்றிதழ் வடிவம், வாசகம், வண்ணம் மாறாது தேவையான அளவிற்கு அச்சடித்து, தேர்தல் நடத்தை விதிகள் முடிவுற்ற பின் தள்ளுபடி சான்று பயனாளிகளுக்கு வழங்குவதற்கான நாள், நடைமுறைகள் தெரிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை குறித்து கூட்டுறவு வங்கி ஊழியர்கள் வாக்காளர்களிடம் ஆசையை தூண்டுவது போல் உள்ளது. எனவே, தேர்தல் விதியை மீறிய செயலாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, மாநில தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளிக்கப்படும் என அவர்கள் கூறினர்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!