‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? இந்த வார எலிமினேஷன்! ஷாக் ரிப்போர்ட்!
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில் முதல் வாரத்தில் எலிமினேஷன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து மக்களின் குறைவான வாக்குகளுடன் வெளியேறும் போட்டியாளர் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பிக்பாஸ் அல்டிமேட்:
விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இதுவரை பல மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றி கண்ட இந்த நிகழ்ச்சி தமிழிலும் நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த அக்டோபர் மாதம் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் முடிந்தது அதில் சின்னத்திரை நடிகர் ராஜு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின் பிக்பாஸ் ஐந்து சீசன்களில் கலந்து கொண்ட சுவாரசியம் அதிகமாக போட்டியாளர்களுக்கு மறுவாய்ப்பு வழங்கப்படும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிகழ்ச்சியில் 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சி தொடங்கப்பட்டு முதல் வாரத்தில் பல பிரச்சனைகள் வந்தது. பழைய போட்டியாளர்கள் என்பதால் அவர்கள் கேமரா உணர்வுடன் விளையாடி வருகின்றனர். அதனால் வேண்டும் என்றே பல பிரச்சனைகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் முதல் வாரத்திலேயே நாமினேஷன் நடந்துள்ளது. மேலும் எலிமினேஷன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நிரூப், அனிதா, சுருதி, சினேகன், ஜூலி, வனிதா, சுரேஷ், அபிநய் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர். அதில் இந்த வாரம் மக்களின் குறைவான வாக்குகளுடன் அபிநய் கடைசி இடத்தில் இருப்பதாக வாக்கு பட்டியல் வெளியாகி இருக்கிறது. மேலும் முதல் இடத்தில் நிரூப் இருக்கிறார். அதனால் அபிநய் இந்த வாரம் வெளியேற அதிகம் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.