பிசினஸிற்கு இடைவெளி விட்ட பாக்கியா, தாத்தாவை குணப்படுத்த வந்த மருத்துவர்- இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

0
பிசினஸிற்கு இடைவெளி விட்ட பாக்கியா, தாத்தாவை குணப்படுத்த வந்த மருத்துவர்- இன்றைய
பிசினஸிற்கு இடைவெளி விட்ட பாக்கியா, தாத்தாவை குணப்படுத்த வந்த மருத்துவர்- இன்றைய "பாக்கியலட்சுமி" எபிசோட்!
பிசினஸிற்கு இடைவெளி விட்ட பாக்கியா, தாத்தாவை குணப்படுத்த வந்த மருத்துவர்- இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், தாத்தாவை நினைத்து ஈஸ்வரி மிகவும் வருத்தமாக இருக்கிறார். பின் பாக்கியா பிசினஸ் ஆர்டர்ஸ் எடுக்க வேண்டாம் என சொல்கிறார். பின் கோபி தாத்தாவை குணப்படுத்த ஒரு மருத்துவரை வரவழைக்கிறார்.

பாக்கியலட்சுமி:

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில்,கோபி அவரது அம்மாவிடம் அப்பா எப்படி இருக்கிறார் என்பது பற்றி கேட்கிறார். அவர் இரவெல்லாம் தூங்க முடியாமல் கஷ்டப்பட்டதாக சொல்ல, கோபி ஏன் அப்படி இருக்கிறது என மருத்துவரிடம் கேட்கலாம் என சொல்கிறார். இப்படியே படுத்தே இருந்தால் உடம்பெல்லாம் புண்ணு வந்துவிடுமாம், அதனால் சீக்கிரமாக சரி செய்ய வேண்டும் என ஈஸ்வரி சொல்ல, அதெல்லாம் மாதக்கணக்கில் இருந்தால் தான் வரும் தாத்தாவிற்கு வேற எதுவும் வராது என ஜெனி சொல்கிறார். பின் கோபி ஏன் காபி குடிக்காமல் வைத்திருக்கிறார் என பாக்கியா கேட்க, இது ஜெனி கொடுத்த காபி என சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

இனிமேல் நீ எனக்கு காபி கொடு என கோபி சொல்ல, பாக்கியா சிரித்துக் கொண்டே செல்கிறார். பின் செல்வி பாக்கியாவிடம் ஒரு பெரிய ஆர்டர் வந்திருப்பதாக சொல்ல, பாக்கியா இப்போதைக்கு ஆர்டர் எதுவும் எடுக்க வேண்டாம் மாமாவிற்கு உடல்நிலை சரியாகட்டும் அப்பறம் எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என சொல்கிறார். பின் அமிர்தா குடும்பம் தாத்தாவை பார்க்க வருகின்றனர். தாத்தாவை சென்று பார்க்க, பொங்கல் அன்று எல்லாம் எப்படி இருந்தீங்க என அமிர்தா சொன்னார். அதற்காக வருத்தப்படாதீங்க அடுத்த வருஷம் எல்லாரும் சேர்ந்து கொண்டாடத்தான் போகிறோம் என சொல்கிறார்.

பின் அமிர்தா எண்ணெய் ஒன்றை கொண்டு வந்து கொடுக்க மருந்துகளுடன் இதையும் சேர்த்து பயன்படுத்துங்கள் என அமிர்தாவின் அப்பா சொல்கிறார். குழந்தை எங்கே என தாத்தா கேட்க பாக்கியாவிடம் இருப்பதாக சொல்கிறார். பின் செழியன் மருத்துவருக்கு வழி சொல்ல, அவர் வீட்டிற்கு வருகிறார். உங்க பெயர் என்ன என கேட்க ரஜினிகாந்த் என சொல்கிறார். சின்ன பையனாக இருக்கீங்க என பாக்கியா கேட்க அப்போ நான் டாக்டர் இல்லை என நினைக்கிறீர்களா என கேட்கிறார்.

புது கடை பிரச்சனைக்கு காரணத்தை தெரிந்து கொண்ட கண்ணன், உண்மையை சொல்வாரா? இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

ஐயோ அப்படி எல்லாம் இல்லை என பாக்கியா சொல்ல, நாம தாத்தாவை பார்ப்போமா என கேட்கிறார். தாத்தாவை பார்த்துவிட்டு எல்லாம் சரியாகிவிடும் என காமெடியாக பேச ஈஸ்வரி என்ன இதெல்லாம் என கேட்கிறார். மறுபக்கம் மயூராவின் பிறந்தநாள் விழாவிற்கு தயாராகி இருக்கின்றனர். மயூரா கிளம்பி வர, ராதிகா மயூராவை பார்த்து சந்தோசப்படுகிறார். ராதிகா பிறந்தநாள் வாழ்த்துக்களை சொல்ல, இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!