ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!

0
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி - ஆகாஷ் சோப்ரா கணிப்பு!
ஐபிஎல் 2022: ஸ்ரேயாஸ் ஐயரை குறிவைத்த விராட் கோஹ்லியின் RCB அணி – ஆகாஷ் சோப்ரா கணிப்பு!

ஐபிஎல் 2022 ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்படுபவர்களில் ஒருவராக ஷ்ரேயாஸ் ஐயர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐயருக்கு மட்டும் 20 கோடி ரூபாய் ஒதுக்கி வைத்துள்ளதாக ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

ஆகாஷ் சோப்ரா கணிப்பு:

15 வது சீசன் IPL தொடர் மார்ச் 27 ஆம் தேதி தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு IPL தொடரில் புதிதாக லக்னோ, அகமதாபாத் ஆகிய 2 புதிய அணிகள் சேர்க்கப்பட்டு மொத்தம் 10 அணிகள் பங்கு பெறுகிறது. சமீபத்தில் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்க வைக்கப் போகும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. இதில் ஒரு சில அணிகள் இதற்கு முன் அவ்வணிக்கு கேப்டன் செய்த வீரர்களை தக்க வைக்கவில்லை. இதனால் மெகா ஏலத்தில் சிறந்த வீரரை எடுத்து கேப்டனாக நியமிக்க திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் ஸ்ரேயாஸ் ஐயர் அதிக விலைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ICC U-19 WORLD CUP அரையிறுதி: இந்தியா vs ஆஸ்திரேலியா ட்ரீம் 11 கணிப்புகள் – ஒரு அலசல்!

இந்நிலையில் கடந்த ஆண்டு RCB அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகினார். இந்த அறிவிப்பு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணி அதை தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) ஆகிய 3 அணிகளும் கேப்டனை நியமிக்க அதிக கவனம் செலுத்தி வருகிறது. தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஏலத்தில் எடுக்கும் கேப்டன் கணிப்பு குறித்து ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் சேனல் வீடியோ பதிவில் கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022: டாப் வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும் ‘தல’ தோனியின் CSK – ரசிகர்கள் உற்சாகம்!

அதில் நேற்று வெளியிட்ட இறுதி பட்டியலில் ஐயர் மிகவும் விலை உயர்ந்த வீரர் என்று கணித்துள்ளார். கேகேஆர் மற்றும் ஆர்சிபி அணியில் அவரை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக கூறினார். மேலும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் RCB 20 கோடியை ஸ்ரேயாஸ் ஐயருக்கு ஒதுக்கி வைத்துள்ளதாக முன்னாள் இந்திய அணி கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். இதனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வரும் 13, 14 தேதிகளில் நடைபெறும் மெகா ஏலத்தில் ஸ்ரேயாஸ் ஐயரை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!