ஐபிஎல் 2022: டாப் வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும் ‘தல’ தோனியின் CSK – ரசிகர்கள் உற்சாகம்!

0
ஐபிஎல் 2022: டாப் வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும் 'தல' தோனியின் CSK - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் 2022: டாப் வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும் 'தல' தோனியின் CSK - ரசிகர்கள் உற்சாகம்!
ஐபிஎல் 2022: டாப் வீரர்களை மெகா ஏலத்தில் குறிவைக்கும் ‘தல’ தோனியின் CSK – ரசிகர்கள் உற்சாகம்!

ஐபிஎல் 2022 ஏலம் வருகிற பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு IPL யில் பங்கேற்கும் 10 அணிகளும் இறுதி பட்டியலில் வெளியிட்ட 590 வீரர்களில் சிறந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க திட்டமிட்டு வருகிறார்கள். இதனை தொடர்ந்து பேட்ஸ்மேன்கல் , பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர்கள் என சென்னை சூப்பர் கிங்ஸ் மெகா ஏலத்தில் 11 வீரர்களை குறிவைத்துள்ளது.

IPL மெகா ஏலம்:

ஐபிஎல் ஏலம் பிப்ரவரி 12-13 தேதிகளில் பெங்களூரில் நடைபெற உள்ளது. கோவிட் வழிமுறைகளுடன் ஆக்க்ஷன் நடக்கும் என்று BCCI சமீபத்தில் தெரிவித்தது. இந்த ஆண்டு மெகா ஏலத்தில் வலுவான வீரர்களை தேர்ந்தெடுக்கும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலம் குறித்து கூடிய விரைவில் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது. இதற்காக CSK அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி ஜனவரி 31 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். இந்த ஆண்டு IPL யில் மொத்தம் 1214 வீரர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க தங்களது பெயரை பதிவிட்ட நிலையில் அதில் இந்திய கிரிக்கெட் வாரியம் 590 வீரர்களை மட்டும் தேர்ந்தெடுத்துள்ளது.

தினசரி இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல் – மாநில அரசு அறிவிப்பு!

BCCI அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்துக் கொண்டு மற்ற வீரர்களை விடுத்துள்ளது. கடந்த ஆண்டு IPL சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 வீரர்களாகிய தோனியை 12 கோடிக்கும், மொயின் அலியை 8 கோடிக்கும், ருதுராஜ் கெய்க்வாட்டை 6 கோடிக்கும் சிஎஸ்கே தக்கவைத்துள்ளது. இந்த ஆண்டு ஏலத்தில் வீரர்களை எடுக்க CSK க்கு 48 கோடி ரூபாய் மீதம் உள்ளது. இதை தொடர்ந்து இந்த ஆண்டு ஏலத்தில் இதற்கு முன் CSK அணியில் தொடக்க வீரராக திகழ்ந்த தென்னாப்பிரிக்கா அணி வீரர் டு ப்ளசீஸை மீண்டும் அணியில் எடுக்க திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி முறையில் தேர்வுகள் – அண்ணா பல்கலை அறிவிப்பு!

மேலும் , கடந்த ஆண்டு வரை CSK அணியில் விளையாடிய , சுரேஷ் ரெய்னா , தீபக் சாஹர் ராபின் உத்தப்பா ஆகியோரை மீண்டும் ஏலத்தில் எடுத்து அணியில் தக்க வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த ஆண்டு புதிதாக பேட்ஸ்மேன்களாக தென்னாபிரிக்கா வீரர் குயின்டன் டி காக்க ,மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் நிதிஷ் ராணா ஆகியோரையும் பந்துவீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், ஹர்ஷல் படேல், ஜேசன் ஹோல்டர், வனிந்து ஹசரங்க என மொத்தம் 11 வீரர்களை சென்னை அணி ஏலத்தில் எடுக்க உள்ளது .

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!