TNPSC குரூப் 2, 4 & VAO தேர்வர்கள் கவனத்திற்கு – புதிய பாடத்திட்டங்கள் வெளியீடு!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது குரூப் 4 & VAO மற்றும் குரூப் 2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது. தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் இதனை பார்த்து பயன் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 & VAO:
அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை நடத்தி வருகிறது. கடந்த 2 வருடங்களாக கொரோனா பேரிடர் காரணமாக எவ்வித பதிவிகளுக்கும் போட்டித்தேர்வுகள் நடைபெறவில்லை. தற்போது கொரோனா பரவல் குறைந்த நிலையில் TNPSC தேர்வாணையம் 22 வகையான போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பல்வேறு புதிய விதிமுறைகளும் கொண்டு வரப்பட்டுள்ளது. போட்டித்தேர்வுகளில் குறைந்தபட்ச கல்வித்தகுதியை கொண்ட குரூப் 4 தேர்வை தமிழகத்தில் லட்சகணக்கான மக்கள் எழுதுகின்றனர். அரசுத்துறைகளில் ஆரம்ப நிலை பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்படுவதால் இதற்கான கல்வித் தகுதி 10ம் வகுப்பு ஆகும்.
தமிழகத்தில் இம்மாதம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை – முழு விபரம் இதோ!
இளநிலை உதவியாளர் தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் கிராம நிர்வாக அலுவலர் வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய பணியிடங்களுக்கு நடத்தப்படும் இந்த குரூப் 4 மற்றும் விஏஓ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. குரூப் 4 தேர்வில் ஒவ்வொரு வினாவுக்கும் 1.5 மதிப்பெண்கள் என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தற்போது டிஎன்பிஎஸ்சி தேர்வில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில மொழித் தேர்வு ரத்து செய்யப்பட்டு தமிழ்மொழித் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது.
நாட்டின் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
இந்த தமிழ் மொழித்தேர்வில் 40% மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயமாகும். 40% மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே மற்ற பாடப்பகுதி வினாத்தாள் மதிப்பீடு செய்யப்படும். எனவே தமிழ் மொழித்தேர்வு தகுதித்தேர்வாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2022 மார்ச் மாதம் குரூப் 4 & VAO தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழ்மொழித் தேர்வு பாடத்திட்டம் சேர்க்கப்பட்ட 4 & VAO தேர்வுகளுக்காக பாடத்திட்டம் TNPSC யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் குரூப்2 பாடத்திட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.