நாட்டின் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு 9 நாட்கள் தொடர் விடுமுறை – அரசு அறிவிப்பு!
குவைத்தின் பொதுத் துறைக்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 5 வரை சுதந்திர தினம், விடுதலை தினம் மற்றும் அல் இஸ்ரா வால் மிராஜ் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில செய்தி நிறுவனமான குனா அறிவித்துள்ளது.
தொடர் விடுமுறை:
பொதுவாக நாட்டின் முக்கிய பண்டிகைகளை முன்னிட்டு அரசு நிறுவனங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு விடும். கொரோனா பரவல் அச்சம் உலகம் முழுவதும் நிலவி வருவதால் அதிகமாக விடுமுறைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. இதனால் பொது விடுமுறைகள் மீதான ஆர்வம் மக்களுக்கு குறைந்துள்ளது. இல்லையென்றால் அரசு விடுமுறைகள் அல்லது தொடர் விடுமுறைகள் என்றால் மக்கள் மிகவும் குஷியாகி விடுகின்றனர்.
பிப்ரவரி 14 வரை மாநிலம் முழுவதும் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – அரசு உத்தரவு!
துபாய் நாட்டின் குவைத் அரசு பொதுத் துறைக்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 5 வரை சுதந்திர தினம், விடுதலை தினம் மற்றும் அல் இஸ்ரா வால் மிராஜ் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு ஒன்பது நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில செய்தி நிறுவனமான குனா அறிவித்துள்ளது. இந்த நீட்டிக்கப்பட்டுள்ள விடுமுறைக்கு குவைத் அமைச்சரவை திங்கட்கிழமை நடந்த கூட்டத்தின் போது ஒப்புதல் அளித்துள்ளது.
தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு முக்கிய உத்தரவு – பள்ளிகள் திறப்பு எதிரொலி!
அரசின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தாரிக் அல் மெஸ்ரெம், சுதந்திர தினம் மற்றும் விடுதலை தினத்தை கொண்டாடுவதற்காக அனைத்து அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு பிப்ரவரி 27 முதல் மார்ச் 3 வரை ஐந்து நாள் விடுமுறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து அல் இஸ்ரா வல் மிராஜ் பண்டிகையை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படும். மார்ச் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி மீண்டும் தொடங்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.