தமிழக அரசு சமூக பாதுகாப்பு துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2022 – ரூ.30,000/- ஊதியம்..!
கரூர் சமூக நல அலுவலகத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Case Worker, Security Guard போன்ற பணிகளுக்கு என்று, மொத்தமாக 08 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணி பற்றிய முழு விவரங்களையும் கீழே கொடுத்துள்ளோம். இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Karur Social Welfare Office |
பணியின் பெயர் | Case Worker, Security Guard |
பணியிடங்கள் | 08 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 07.02.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
SWO காலிப்பணியிடங்கள் :
- Centre Administrator – 01
- Case Worker – 04
- Security Guard / Driver – 02
- Multi- purpose Helper – 01
SWO கல்வி தகுதிகள் :
Centre Administrator, Case Worker பணிக்கு முதுநிலை சமூகப்பணி, சட்டப்படிப்பு, உளவியல், வளர்ச்சிப்பணி, சமூகவியல் போன்ற பாடப்பிரிவில் UG / PG ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருப்பது அவசியமாகும். மேலும் அரசு / அரசு சாரா தொண்டு நிறுவனங்களில் 3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் பணி அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
Security Guard / Driver பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் முன் அனுபவமுள்ள ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் Driver பணிக்கு தகுந்த ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது அவசியமாகும்.
Multi- purpose Helper பணிக்கு கரூர் மாவட்டத்தில் உள்ள வீட்டு வேலை மற்றும் சமையல் தெரிந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
SWO வயது வரம்பு :
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 21 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியம்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
SWO ஊதியத் தொகை :
- Centre Administrator பணிக்கு ரூ.30,000/-
- Case Worker பணிக்கு ரூ.15,000/-
- Security Guard / Driver பணிக்கு ரூ.10,000/-
- Multi- purpose Helper பணிக்கு ரூ.6,400/-
என பணி மற்றும் பதவிக்கு தகுந்தாற்போல் மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
SWO தேர்வு செயல் முறை :
இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் (Interview) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
SWO விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுத்துள்ள விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அறிவிப்பில் உள்ள முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 07.02.2022 அன்று மாலை 5.45 மணிக்குள் வந்து சேரும்படி அனுப்ப வேண்டும்.
தபால் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சமூகநல அலுவலர்,
மாவட்ட சமூகநல அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் வளாகம்,
கரூர் மாவட்டம்.