IPL 2022:ராயல் சேலஞ்சர்ஸ் ஏலத்தில் குறிவைக்கும் 2 வீரர்கள் – ஆகாஷ் சோப்ரா பேட்டி!ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
ஐபிஎல் 2022 ஏலத்திற்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோரை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் இந்த 2 பௌலர்களும் 7-8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு மீண்டும் ஆர்சிபி அணியில் இணைய வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா பேட்டியளித்துள்ளார்.
IPL மெகா ஏலம்:
இந்த ஆண்டு IPL தொடரில் ஒரு அணி 4 வீரர்களை தக்கவைத்துக்கொள்ளலாம் என்று BCCI அறிவித்திருந்தது. அதேபோல் ராயல் சேலஞ்சர்கள் பெங்களூர் அணி விராட் கோஹ்லி, கிளென் மேக்ஸ்வெல் மற்றும் முகமது சிராஜ் என மொத்தம் 3 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. கடந்த ஆண்டு ராயல் சேலஞ்சர்கள் பெங்களூர் அணி கேப்டன் பதவியிலிருந்து விராட் கோஹ்லி விலகுவதாக அறிவித்தார். அதனால் தற்போது ராயல் சேலஞ்சர்கள் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் மீண்டும் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் ஹர்ஷல் பட்டேலை ஏலத்தில் எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இளநிலை, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் 8700 காலிப்பணியிடங்கள் – இன்றே கடைசி நாள்!
சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடந்த 4-5 ஆண்டுகளில் பெங்களூரு அணிக்காக மிகவும் விளையாடினார். இதை தொடர்ந்து ஹர்ஷல் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2021 சீசனில் 32 விக்கெட்டுகளுடன் RCB க்காக ஊதா தொப்பியை வென்றவர். 2009 ஆம் ஆண்டு முதல் கிரிக்கெட் விளையாடி வரும் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் கடந்த ஐபிஎல் சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக தொடர் விக்கெட் மழை பொழிந்து ‘விக்கெட் டேக்கிங் மிஷன்’ என்ற பட்டத்தைப் பெற்றார். இவர் விக்கெட் வீழ்த்தாத போட்டியே இல்லை. 15 வது IPL செஷனில் ஹர்ஷல் பட்டேல் தக்கவைக்கப்படாதது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
IPL ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் – இறுதி போட்டியிலிருந்து விலகும் இங்கிலாந்து டெஸ்ட் வீரர்கள்!
மேலும் ஹர்ஷல் பட்டேல் கடந்த சீசனில் மட்டும் மொத்தம் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஒரு சீசனில் அதிக விக்கெட்களை வீழ்த்தியோர் பட்டியலில் முதலிடத்தை டுவைன் பிராவோவுடன் பகிர்ந்துள்ளார். பிராவோ 2013ஆம் ஆண்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 32 விக்கெட்களை எடுத்திருந்தார். இப்படி ஹர்ஷல் பட்டேல் தொடர் விக்கெட் மழை பொழிந்தும் ஆர்சிபி அணி பிளே ஆப் சுற்றோடு வெளியேறிவிட்டது. இதனைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட ஹர்ஷலுக்கு வாய்ப்பு கிடைத்தது. தற்போது சஹால் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர் 7-8 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டு மீண்டும் ஆர்சிபி அணியில் இணைய வாய்ப்புள்ளதாக ஆகாஷ் சோப்ரா பெட்டியில் தெரிவித்துள்ளார்.