தமிழக அரசு ஓய்வூதியதாரர்களுக்கு 32% அகவிலைப்படி (DA) உயர்வு – அரசாணை வெளியீடு!
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு திருத்தப்பட்ட ஓய்வூதியம் 14 சதவீதத்திலிருந்து 32 சதவீதமாக அகவிலைப்படி உயர்வு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அகவிலைப்படி (DA) உயர்வு :
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் அதிகரித்து வரும் விலைவாசிக்கு ஏற்ப அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக உயர்த்தியது. பிறகு மேலும் 3% உயர்த்தப்பட்டு தற்போது 31% ஆக உயர்த்தப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதை அடுத்து இந்த அகவிலைப்படி உயர்வு 2021 ஜூலை மாதம் முன்தேதியிட்டு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் மத்திய அரசுக்கு 9,488.70 கோடி ரூபாய் செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல் – எதிர்க்கட்சி தலைவர் கோரிக்கை!
மத்திய அரசை தொடர்ந்து மாநில அரசுகளும் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. அந்த வகையில் தமிழகத்தில் அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு 2022ம் ஆண்டு முதல் அதிகரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்தார். 1-1-2022 முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 1ம் தேதி முதல் தமிழக அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்திலிருந்து 31 சதவீதமாக உயர்ந்தது.
அதனை தொடர்ந்து 7-வது ஊதிய கமிஷன் ஓய்வூதியம் பெறுபவர்கள், குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு திருத்தப்பட்ட அகவிலைப்படி 32% உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் இதனால் பயன் பெறுவார்கள். அரசுக்கு ஆண்டுக்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.