தமிழ்நாடு வருவாய்த்துறையில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – 5 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும் !
திருவள்ளூர் மாவட்டம் வருவாய்த் துறையில் காலியாக உள்ள கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான விண்ணதாரர்களிடமிருந்து நேரடி நியமனம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 20.01.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
TNRD வேலைவாய்ப்பு விவரங்கள் :
- கிராம உதவியாளர் பணிக்கு எட்டு (08) காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பத்தாரர்கள் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
- பொதுப்பிரிவை சேர்ந்தோர் விண்ணப்பிக்கும் நாளில் 21 வயது பூர்த்தி அடைந்தும் 01.01.2022 அன்று 30 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/ மிகவும் பிற்படுத்தப்பட்டோர்: விண்ணப்பிக்கும் நாளில் 21 பூர்த்தி அடைந்தும் 01.01.2022 அன்று 35 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தார்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். அது நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் (Call Letter) அனுப்பி வைக்கப்படும்.
- தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.11,100/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதிய ஏற்ற முறையில் அடிப்படை ஊதியம் மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
- மிதிவண்டி ஒட்டத் தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
- விண்ணப்பதாரர்கள் பொன்னேரி வட்டத்தினைச் சேர்ந்தவர்களாகவும், அதே வட்டத்தில் நிரந்தரமாக வசித்து வருபவர்களாகவும் இருக்க வேண்டும்.
- காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
- ஒவ்வொரு கிராம உதவியார் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
TNRD விண்ணப்பிக்கும் முறை :
கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் நேரிலும் மற்றும் இணையதளத்திலும் 20.01.2022 (வியாழக்கிழமை) அன்று பிற்பகல் 5.45 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில், வட்டாட்சியர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ 20.01.2022 (வியாழக்கிழமை) பிற்பகல் 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நாளையுடன் இப்பணிக்காக கால அவகாசம் நிறைவடைகிறது.