தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு – ஜனவரி 24ம் தேதி தொடக்கம்!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் இரவு, பகல் பாராமல் மக்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவ கலந்தாய்வு:
இந்தியா முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்து வருகிறது. தமிழகத்தில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் கலந்தாய்வு வழக்கமாக ஜூலையில் நடைபெறும். இந்த வகையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நீட் தேர்வு மற்றும் கலந்தாய்வு தாமதமானது. இதனை தொடர்ந்து மருத்துவ படிப்புகளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளித்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசு விநியோகம்! பொதுமக்கள் புகார்!
இந்த வழக்கு நிலுவையில் இருந்த காரணத்தால் முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது. அதை உடனடியாக நடத்தக்கோரி நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஒ.பி.சி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு உத்தரவுக்கு அனுமதி அளித்து உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும் முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கான கலந்தாய்வை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டது.
10, 12 & ITI முடித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரயில்வேயில் 2,422 காலிப்பணியிடங்கள்!
இந்த வகையில் தமிழகத்தில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு 24 ஆம் தேதி நடத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் 2,541 முதுநிலை மருத்துவ இடத்துக்கான தரவரிசை பட்டியல் நாளை மாலை வெளியாக வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் குறித்து சமூக வலைத்தளத்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் மேலும் வலுசேர்க்க கலந்தாய்வில் பங்கேற்க உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.