தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் – பொங்கல் பரிசு விநியோகம்! பொதுமக்கள் புகார்!
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் 21 வகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தரமற்று இருப்பதாக பொதுமக்கள் புகாரளித்து வருகின்றனர்.
பொங்கல் பரிசுத்தொகுப்பு:
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு மற்றும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கடுகு, சீரகம், மல்லி தூள், மிளகு, புளி, கோதுமை மாவு, ரவை, உப்பு, மிளகு உள்ளிட்ட 21 வகை பொருட்களை பரிசுத்தொகுப்பாக வழங்கியது. கடந்த 4ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் தினமும் 200 குடும்பங்கள் வீதம் டோக்கன் முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு வருகின்றனர்.
IND VS SA : 7 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
பொருட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாவும், பொருட்கள் தரமற்று இருப்பதாகவும் ரேஷன் அட்டைதாரர்கள் புகாரளித்து வருகின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் அறிக்கை வெளியிட்டிருந்தார். நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தரமான பொங்கல் பரிசுப் பொருள்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் திருப்பத்தூர் கந்திலி அருகே மோட்டூர் ஊராட்சியில் ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு பொருட்கள் தரமற்று இருப்பதாக கூறி பொதுமக்கள் பொருட்களை சாலைகளில் எறிந்தனர்.
10, 12 & ITI முடித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரயில்வேயில் 2,422 காலிப்பணியிடங்கள்!
மோட்டூர் ஊராட்சியில் உள்ள c2513 ரேஷன் கடையில் இன்று வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பு பரிசுத்தொகுப்பில் மிளகு பதிலாக பருத்திக் கொட்டையும், மஞ்சள் தூள் கோலமாவு போல் உள்ளது. மேலும் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாகவும் கூறி பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்புகளை பிரித்து சாலையில் கொட்டி வருத்தத்தை தெரிவித்தனர். இதையடுத்து மோட்டூர் ரேஷன் கடை முன்பு பொதுமக்கள் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சில மணி நேரம் பரபரப்பு நிலவியது.