IND VS SA : 7 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

0
IND VS SA : 7 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IND VS SA : 7 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி - ரசிகர்கள் எதிர்பார்ப்பு!
IND VS SA : 7 ஆண்டுகளுக்கு பிறகு பேட்ஸ்மேனாக களமிறங்கும் கோஹ்லி – ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டெஸ்ட் தொடர் முடிவடைந்த நிலையில் இரு அணிகளும் ஒருநாள் போட்டிகளில் மோத உள்ளன. இந்நிலையில் விராட் கோஹ்லி ஒரு நாள் போட்டியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி இத்தொடரில் ஒரு பேட்ஸ்மேனாக களமிறங்க உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு:

கடந்த ஆண்டு சர்வதேச T20 போட்டிகளின் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகுவதாக அறிவித்தார். ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த ஆண்டு ஜனவரி 15ம் தேதி முடிவடைந்த இந்தியா, தென்னாபிரிக்கா அணிகள் மோதிய 3வது டெஸ்ட் போட்டியில் இந்தியா தொடரை நழுவ விட்டது. அதை தொடர்ந்து விராட் கோஹ்லி கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனால் விராட் கோஹ்லி ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தற்போது ஜனவரி 19ம் தேதி தொடங்கவிருக்கும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ஒரு பிளேயராக விளையாட உள்ளார்.

10, 12 & ITI முடித்தவர்களுக்கு சூப்பர் அறிவிப்பு – ரயில்வேயில் 2,422 காலிப்பணியிடங்கள்!

விராட் கோஹ்லிக்கு பதிலாக ஒரு நாள் மற்றும் T20 போட்டிகளுக்கு கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிகளில் இந்திய அணியை சிறப்பாக வழி நடத்தி தொடரை வென்று தனது திறமையை நிரூபித்தார். தற்போது ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக KL ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் தொடரில் தோல்வியுற்றதால் ஒரு நாள் தொடரை கைப்பற்ற வேண்டும் என்று இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

மாநிலத்தில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை? முதல்வரின் முக்கிய அறிவிப்பு!

கடந்த ஆண்டு விராட் கோஹ்லி ஒரு சதம் கூட அடிக்கவில்லை என்பதால் நாளை நடக்க இருக்கும் இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டியில் விராட் கோஹ்லி மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தியா, தென்னாப்பிரிக்கா மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை போலந்து பார்க் மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கவுள்ளது. 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட இத்தொடர் ஜனவரி 23 ஆம் தேதி முடிவடைகிறது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!