ஜனவரி 22 முதல் ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு செல்ல வேண்டும் – அமைச்சர் உத்தரவு!
கேரள மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், ஆசிரியர்கள் தொடர்ந்து பள்ளிக்கு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பினை கேரள கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
ஆன்லைன் வகுப்புகள்:
நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மற்றும் அதன் உருமாறிய வகையான ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்றின் பரவல் அதிகரித்து வருகிறது. முன்னதாக இருந்த டெல்டா வகை வைரஸை விட ஓமைக்ரான் வகை வைரஸ் அதிக வேகத்தில் பரவுவதாக நிபுணர்கள் மருத்துவ நிபுணர்கள் எச்சரித்தனர். இதனால் மத்திய அரசு அனைத்து மாநில மற்றும் யூனியன் அரசுகளையும் தீவிரமாக கட்டுப்பாடுகளை விதித்து நோய் பரவலை கட்டுப்படுத்த உத்தரவிட்டது. இதனால் பல மாநிலங்களிலும் கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் சமூகநலத்துறையில் வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு!
கேரள மாநிலத்தில் மாணவர்கள் நலன் கருதி முன்னதாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 1 முதல் 9 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 21ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 22ம் தேதி முதல் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும். ஆனாலும் ஆசிரியர்கள் தினமும் பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என்றும், பள்ளிகளில் இருந்து மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று கல்வி அமைச்சர் வி சிவன்குட்டி கூறியுள்ளார். பள்ளிகள் மூலம் ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படும் என்றும் கூறினார்.
தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் தற்போதைய அட்டவணையின்படி தொடரும். நேரடி வகுப்புகளின் நிலைமையை ஆய்வு செய்ய வரும் திங்கட்கிழமை பள்ளிகளில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடடத்தப்பட உள்ளது. கூடுதலாக கல்வித்துறை உயர் அதிகாரிகளின் கூட்டத்தையும் நடத்தவுள்ளது. கேரளா மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வளாகத்தை ஜனவரி 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சுத்தம் செய்ய பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும் 15 முதல் 18 வயது வரையிலான மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வரும் நிலையில், கேரளாவில் நாளை முதல் பணிகள் தொடங்க உள்ளது. இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 967 பள்ளிகளில் ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.