தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று இலேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு உரிய வானிலை நிலவரத்தை பற்றியும் அறிவித்துள்ளது.
வானிலை தகவல்
தமிழகத்தில் கடந்த நவம்பர் மாத தொடக்கத்தில் வடகிழக்கு பருவக்காற்று காரணமாக பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்தது. தற்போது தமிழகத்தில் மழையின் அளவு குறைந்துள்ளது. இதையடுத்து இன்று தமிழகத்தில் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இலேசான மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்றும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
ரோஹித் சர்மா முதல் அஸ்வின் வரை – இந்திய டெஸ்ட் கேப்டன் பதவிக்கு 5 வீரர்கள் பரிந்துரை!
18.01.2022: தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
19.01.2022 முதல் 22.01.2022 வரை: தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்துற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 குறைந்தபட்ச வெப்பநிலை 22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: ஏதுமில்லை.