Post Office இல் சேமிக்க திட்டமிடுவோர் கவனத்திற்கு – சிறந்த திட்டத்தின் முழு விபரங்கள்!
இந்திய அஞ்சல் துறையில் பல்வேறு சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் முதலீடு செய்வதால் குறைந்த முதலீடு மூலமாக அதிக வட்டி தொகையை பெற முடிகிறது. தற்போது சிறந்த சேமிப்பு திட்டத்தை பற்றியும் அதன் பலன்களை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
அஞ்சல் சேமிப்பு திட்டம்
கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் பல்வேறு பொருளாதார நெருக்கடி நிலையை எதிர்கொண்டு வந்தனர். அதனால் நெருக்கடி நிலையை சரி செய்ய பாதுகாப்பான முதலீட்டில் தங்கள் பணத்தை சேமிக்க தொடங்கினர். தற்போது வங்கியை காட்டிலும் அஞ்சல் அலுவலகத்தில் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதில் அதிக லாபம் கிடைக்கிறது. அத்துடன் இதில் முதலீடு செய்வது மூலமாக தங்கள் பணத்திற்கு வட்டி, வருவாய், பாதுகாப்பு, வரிச்சலுகை உள்ளிட்டவை கிடைக்கிறது. அதன் காரணமாக அஞ்சல் அலுவலகத்தில் உள்ள சேமிப்பு திட்டங்கள் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
Pongal Special 2022 – மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுவது ஏன்? தவறாமல் படிங்க!
தற்போது அஞ்சல் துறையில் உள்ள சேமிப்பு திட்டங்களில் சிறப்பான சேமிப்பு திட்டத்தை பற்றியும் அதன் வட்டி விகிதங்களை பற்றியும் விரிவாக தெரிந்து கொள்ளலாம். இத்திட்டத்தில் முதலாவது இடத்தை பெற்றிருப்பது மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் ஒரு ஆண்டுக்கு 7.4% வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்த சேமிப்பு திட்டமாக கிசான் விகாஸ் பத்திர திட்டம் உள்ளது. இத்திட்டத்தில் பத்திரத்தை தனி நபரோ அல்லது மூன்று பேர் வரையில் கூட்டாகவோ வாங்க முடியும்.
தமிழகத்தில் ஜன.17 (திங்கட்கிழமை) பொது விடுமுறை – அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்!
மேலும் ஒரு ஆண்டுக்கு வட்டி 6.9% வட்டி விகிதம் அளிக்கப்படுகிறது. இதையடுத்து பொது வருங்கால வைப்பு நிதி மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.1% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்ததாக சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் இடம்பெற்றுள்ளது. இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 7.6% வட்டி விகிதம் வரை வழங்கப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. ஆதலால் சிறந்த சேமிப்புத் திட்டத்தையும் வட்டி விகிதங்களையும் தெரிந்து கொண்டு பிறகு சேமிப்பு திட்டத்தில் இணைய வேண்டும்