“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன், ஐஸ்வர்யா மீண்டும் ஜோடி சேரும் புதிய சீரியல் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா, ஜீ தமிழில் புதிய சீரியல் ஒன்றில் இருவரும் நடிக்க இருப்பதாக வெளியான செய்திக்கு விளக்கம் ஒன்றை அளித்திருக்கிறார்.
விஜே தீபிகா:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன், தம்பிகள் என நான்கு பேர் பாசத்துடன் இருக்க கடைசி தம்பி கண்ணன் காதல் திருமணம் செய்து கொள்கிறான். அதனால் குடும்பத்தில் விரிசல் ஏற்படுகிறது. அம்மா இறப்பிற்கு கூட வராத கண்ணன் மொட்டை அடித்து இறுதி சடங்குகள் செய்தது அனைத்தும் மக்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் சரவண விக்ரம் தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தினார்.
கலர்ஸ் தமிழ் ‘அபி டெய்லர்’ சீரியலில் களமிறங்கும் புதிய பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
அவருக்கு ஜோடியாக விஜே தீபிகா ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்தார். இருவரும் ஒன்றாக நடித்ததன் மூலமாக நெருங்கிய நண்பர்களாகினர். ஆனால் தீபிகாவிற்கு அதிகமான முகப்பரு இருந்ததால் சீரியலில் இருந்து அவரை நீக்கி விட்டனர். தற்போது கண்ணனிற்கு ஜோடியாக சாய் காயத்ரி நடித்து வருகிறார். இந்நிலையில் சரவண விக்ரம், விஜே தீபிகா இணைந்து யூடுப் சேனல் ஒன்றை நடத்தி வருகின்றனர். இவ்வாறு பல வீடியோக்களை பதிவிடுவதை பார்த்த ரசிகர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகளை பரப்பினர்.
ஆனால் நாங்கள் வெறும் நண்பர்கள் தான் என பல இடங்களில் சொல்லி இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் இருவரும் இணைந்து ஜீ தமிழில் ஆனந்தம் என்ற சீரியல் நடிக்க இருப்பதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. ஆனால் அது உண்மை இல்லை இது குறித்து தீபிகா இன்ஸ்டா பக்கத்தில் கூறுகையில், நானும் சரவணனும் இணைந்து சீரியலில் நடிக்க இருப்பதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதுவும் என் அப்பா எனக்கு அனுப்பி கேட்கும் அளவிற்கு அந்த செய்தி பரவி இருக்கிறது. ஆனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என சொல்லி இருக்கிறார்.