விழுப்புரத்தில் டிச.24ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வரும் டிச.24ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு மாவட்டங்களில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இந்த வேலைவாய்ப்பு முகாமை நடத்துவதில் அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் முக்கிய பங்கு வகித்து வருகிறது. இத்தகைய வேலைவாய்ப்பு முகாம் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது விழுப்புரம் மாவட்டத்தில் வரும் டிச.24ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் த.மோகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் டிச.26ம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் – ஆய்வு மையம் அறிக்கை!
இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, டிப்ளமோ மற்றும் இன்ஜினியரிங் படித்த 18 முதல் 30 வயதுக்குள் உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். இதில் 20க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு முகாமானது விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Post office இல் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு – டிஜிட்டல் கணக்கை எப்படி தொடங்குவது?
இதில் கலந்துகொள்ள இணையதள முகவரியில் மனுதாரராக தங்களது கல்வி விபரங்களை பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தங்களுடைய அனைத்து கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை மற்றும் சுயவிபரக்குறிப்பு உள்ளிட்டவைகளுடன் நேரில் வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக வருகிற டிச.24ம் தேதி நடைபெறவுள்ள தனியார் வேலைவாய்ப்பு முகாமில் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அம்மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.