தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதா? சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்தது. ஆனால் தற்போது பனிக்காலம் தொடங்கிவிட்டதால் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து விட்டது. அந்த வகையில் இன்றைய (டிச.21) வானிலை குறித்து இந்த பதிவில் காணலாம்.
சென்னை வானிலை:
தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கி இந்த மாதம் தொடக்கத்தில் தான் குறையத் தொடங்கியது. அதனை தொடர்ந்து பனிக்காலம் தொடங்கியுள்ளதால் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து விட்டது. தற்போதைய நிலவரப்படி காலை வரைஅதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தின் இன்றைய வானிலை குறித்த விபரங்களை இந்த பதிவில் காணலாம்.
இன்றைய வானிலை:
21.12.2021 முதல் 25.12.2021 வரை: தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
வெப்பநிலை எச்சரிக்கை:
21.12.2021 மற்றும் 22.12.2021 ஆகிய தினங்களில் உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும்.
தமிழகத்தில் நாளை (டிச.22) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாக காணப்படும்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் ஒட்டி காணப்படும்.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவியது.