ஆணவ பேச்சால் தள்ளிப்போன ரிலீஸ் – ‘என்ன சொல்லப் போகிறாய்’ அஸ்வின் உருக்கமான பதிவு!
தன் முதல் படமான என்ன சொல்ல போகிறாய் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் நடிகர் அஸ்வின் கூறிய கருத்துக்கள் மிகவும் சர்ச்சையாக பரவி வருவதால் திரைப்பட வெளியீடு தள்ளிப்போயுள்ளது. இதனால் அஸ்வின் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
முதல் பட வெளியீடு:
விஜய் டிவியின் சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர் அஸ்வின். பாவனியுடன் அவர் ஜோடியாக நடித்திருந்த ரெட்டை வாழ் குருவி மிகவும் ஹிட் அடித்த சீரியல். தொடர்ந்து வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக மிகவும் கனவோடும், அதே சமயம் விடாமுயற்சியுடனும் தொடர்ந்து முயற்சி வந்தார். பல குறும்படங்களிலும் அஸ்வின் நடித்துள்ளார். இவை அனைத்தையும் பெற்றதை விட குக் வித் கோமாளி சமையல் நிகழ்ச்சியில் அஸ்வின் கலந்து கொண்டு பெற்ற வளர்ச்சி தான் அவரை வெள்ளித்திரை நாயகனாக மாற்றியுள்ளது. சமையல் நிகழ்ச்சி மூலம் சிவாங்கியுடன் அஸ்வின் சேர்ந்து தமிழகம் முழுவதும் பிரபலமாகி விட்டார்.
மீண்டும் கர்ப்பமாகும் கண்ணம்மா? விறுவிறுப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ கதைக்களம்! ப்ரோமோ ரிலீஸ்!
இவர் கிட்டத்தட்ட 10 வருடங்களாக வெள்ளித்திரை வாய்ப்புகளுக்காக போராடி வந்துள்ளார். ரக்சன், கவின் அஸ்வின் இவர்கள் மூன்று பேரும் தங்களது திரைப்பட வாய்ப்புகளுக்கான தேடலை ஒரே காலகட்டத்தில் தொடங்கியுள்ளனர். இவரின் 10 வருட கனவு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக நிறைவேறியது. என்ன சொல்ல போகிறாய் என்ற திரைப்படத்தில் அஸ்வின் ஹீரோவாக நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு விழா நடந்தது. அப்போது அஸ்வின் நான் கதை கேட்கும் போது, கதை நன்றாக இல்லையென்றால் தூங்கி விடுவேன். அப்படி கிட்டத்தட்ட 40 கதைகள் கேட்கும் போது தூங்கியிருக்கிறேன் என்று கூறியிருந்தார். முதல் படம் கூட வெளிவராத நிலையில், இவர் ஆணவத்துடன் இவ்வாறு பேசி இருப்பது பலருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விராட் கோஹ்லி தலைமையில் தென் ஆப்ரிக்காவிற்கு பறந்த இந்திய அணி – ரசிகர்கள் உற்சாகம்!
இதனால் அஸ்வின் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்து விவாதிக்கப்பட்டு வருகிறது. பல கடுமையான விமர்சனங்கள் இவர் மீது தற்போது வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், என்ன சொல்ல போகிறாய் திரைப்படம் முதலில் இந்த மாதம் 24 ஆம் தேதி கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாக இருந்தது. தற்போதைய சர்ச்சை படத்தை பாதிக்கும் என்பதால் படத்தின் வெளியீட்டை 2022ம் ஆண்டிற்கு தள்ளி வைத்துள்ளார் தயாரிப்பாளர். இதனால் அஸ்வின் தனது சமூக வலைத்தளத்தில் என் படத்தின் முதல் நாள் முதல் ஷோ பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். என்னுடைய முதல் படம் என்பதால் மிகவும் சந்தோஷமாக இருந்தேன். தற்போது அது தள்ளிப்போய் உள்ளது. விரைவில் அனைத்தும் சரி ஆகும் என தெரிவித்துள்ளார்.