EMI செலுத்துவோருக்கு ஷாக் அறிவிப்பு – ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் உயர்வு! அதிகரிக்கும் கட்டணம்?
இந்திய ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டியே கட்டாயத்தில் உள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அதிக அளவில் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் வங்கிகளில் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் போன்றவற்றின் ஈஎம்ஐ அதிகரிக்க வாய்ப்புள்ளது.
வட்டி விகிதம் உயர்வு:
இந்திய ரிசர்வ் வங்கி நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கான நிலைப்பாட்டை பராமரித்து வருகிறது. 2021-22 நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 9.5% அளவிற்கு எதிர்பார்க்கிறது. மேலும் சர்வதேச சந்தையில் இந்திய நாணயத்தின் மதிப்பை உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை தற்போது குறைந்துள்ள நிலையில், மற்ற நுகர்வோர் பொருட்களின் விலையானது அதிகரித்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் பாதிப்பை சந்தித்து உள்ளது. நாட்டின் வர்த்தகம் இதனால் பாதிக்கப்படுவதை தடுக்க ரிசர்வ் வங்கி தனது வட்டி விகிதத்தை 1 சதவீதம் அல்லது 100 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
தமிழகத்தில் நாளை (டிச.16) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ரிசர்வ் வங்கி கடந்த முறை 0.75 சதவீத வட்டி உயர்வை அதிகரித்த பிறகு, 15 முதல் 21 சதவீதம் வரை சேவை மற்றும் கன்ஸ்யூமர் பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனத்தின் இன்புட் காஸ்ட் உயர்ந்துள்ளது. நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் கடந்த அக்டோபர் மத்தில் 4.9 % ஆக இருந்தது. ஆனால் முன்னதாக கணக்கிடப்பட்டிருந்த 5.1% அளவை விட அது குறைந்திருந்தது. ஆனால் கோர் பணவீக்கம் அளவீடு 5.9 சதவீதத்தில் இருந்து 6.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. மேலும், பர்சனல் கேர், ஆடை தயாரிப்பு, பொழுதுபோக்கு மற்றும் வீட்டுத் தேவை பொருட்கள் மற்றும் சேவை போன்றவற்றின் விலை தொடர்ந்து அதிகரித்துள்ளதால் மத்திய அரசின் கலால் வரி குறைப்பும் பலனிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
டிசம்பர் 23ம் தேதி பொது விடுமுறை? மாநில அரசு விளக்கம்!
கடந்த 40 வருடங்களில் இல்லாத அளவிற்கு நாட்டின் பொருட்கள் உற்பத்தி விலை அதிக உச்சத்தை அடைந்துள்ளது. இதனால் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரம் அதிகம் பாதிக்கப்ட்டுள்ளது. இதனை சமாளிக்க ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தும் போது பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளும் வட்டியை உயர்த்த வேண்டியதிருக்கும். இதனால் மக்கள் செலுத்தி வரும் வீட்டுக் கடன், வாகன கடன், பர்சனல் லோன் போன்றவற்றின் மாதந்திர தவணை தொகை அதிகரிக்கும் அபாயமும் எழுந்துள்ளது. கொரோனா பெருந்தொற்று கால பேரிடர் நீங்கி நாட்டின் பொருளாதாரத்தை வளர்ச்சிப்பாதையில் செலுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வரும் நிலையில், இந்த தகவலினால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.