டிசம்பர் 23ம் தேதி பொது விடுமுறை? மாநில அரசு விளக்கம்!
பஞ்சாப் மாநிலத்தில், சீக்கிய தியாகி பாய் ஜைதா ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு டிச.23ம் தேதியன்று விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த விடுமுறை அரசிதழில் இல்லாத விடுமுறை என தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
சீக்கிய தியாகி பாய் ஜைதா ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் டிச.23ம் தேதியன்று பொது விடுமுறை அளிக்கப்படுவதாக பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி சமீபத்தில் அறிவித்திருந்தார். ஆனால் டிசம்பர் 23 ஆம் தேதி விடுமுறையானது, அரசிதழ் விடுமுறையாக இருக்காது என்று பஞ்சாப் மாநில அரசு தற்போது விளக்கம் அளித்துள்ளது. மேலும், பாய் ஜைதா ஜியின் பிறந்த நாள் செப்டம்பர் 5ம் தேதி வருவதால், இந்த அரசிதழ் விடுமுறை அடுத்த ஆண்டு பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 31 வரை 144 தடை உத்தரவு அமல் – மாநில அரசு அதிரடி அறிவிப்பு!
இப்போது டிசம்பர் 23 ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படும் பாய் ஜைதா ஜியின் தியாக தினத்தில், கல்வி நிறுவனங்கள் தவிர அனைத்து அரசு அலுவலகங்கள், வாரியங்கள், மாநகராட்சிகள் வழக்கம் போல் இயங்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. சீக்கிய குருவான பாபா ஜிவான் சிங் சீக்கிய தளபதி மற்றும் குரு கோவிந்த் சிங்கின் தோழர் ஆவார். இவரது சாதனையை பறைசாற்றும் விதமாக தான் ஜிவான் சிங் பிறந்த நாளை அரசு பொது விடுமுறையாக அறிவித்து பஞ்சாப் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
SBI PO முதல்நிலை தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு – முழு விவரம் இதோ!
சமீபத்தில் ஆனந்த்பூர் சாஹிப்பில் குரு தேக் பகதூர் தியாகி தினத்தைக் குறிக்கும் நிகழ்ச்சியின் போது, அவரது பிறந்தநாளை முன்னிட்டு பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி வர்த்தமானி அல்லது அரசிதழ் விடுமுறையை அறிவித்திருந்தார். இது சமூக ஊடக தளங்களில், டிச.23ம் தேதி அவரது தியாக தினத்தன்று அளிக்கப்பட்ட விடுமுறை என பல்வேறு குழப்பங்களை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தான் பாபா ஜிவான் சிங் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி அரசு விடுமுறையில் சேர்க்கப்படும் என்று அரசு தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.