TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளில் 11,000 காலிப்பணியிடங்கள் – முழு விபரங்கள் இதோ!
தமிழகத்தில் அரசு பணியிடங்களுக்கான போட்டித்தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் 11 ஆயிரம் காலிபணியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வுகள் நடத்தப்படும் என அரசு பணிகள் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
TNPSC:
தமிழகத்தில் அரசுத்துறை பணிகளுக்கு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மூலம் மூலம் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு பணி நியமனங்கள் செய்யப்படுகிறது. துறை சார்ந்த பணிகள் அதற்கேற்ற கல்வித் தகுதி அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா தாக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எவ்வித போட்டிதேர்வுகளும் நடத்தப்படவில்லை. தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததை அடுத்து TNPSC தேர்வு குறித்து மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் முதல்வர் முக ஸ்டாலின் சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் 3,50,000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.
டிசம்பர் 20 வரை 8 முக்கிய நகரங்களில் முழு ஊரடங்கு உத்தரவு அமல் – மாநில அரசு அறிவிப்பு!
இந்த நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து தேர்வர்கள் காத்திருந்தனர். இந்த நேரத்தில் அண்மையில் அரசு பணியாளர் தேர்வாணையம் 2022ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்வுகள் குறித்த கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் குரூப் 2 தேர்வானது இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, ஆடிட் இன்ஸ்பெக்டர், நன்னடத்தை அதிகாரி, தொழில் கூட்டுறவு அதிகாரி, உதவிப்பிரிவு அதிகாரி போன்ற பதவிகளுக்கு நடத்தப்படும் மொத்தம் 5,831 காலிப்பணியிடங்கள் உள்ளது.
Best TNPSC Coaching Center – Join Now
மேலும் குரூப்-4 தேர்வு குறித்து மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களை தகுதிப்படுத்திக் கொள்ள வசதியாக இந்த தேர்வுகளுக்கான பாடத்திட்டம் அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் மேலும் மாதிரி வினாத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப் 2 மற்றும் குரூப் 4 VAO தேர்வுகளுக்கு மொத்தம் 11,000 காலியிடங்கள் உள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் ஏறத்தாழ 14 ஆயிரம் இடங்களுக்கு தேர்வு நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.