ஜன.31ம் தேதி வரை சர்வதேசிய விமான சேவைக்கான தடை நீட்டிப்பு – ஒமிக்ரான் வைரஸ் எதிரொலி!
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியை தொடர்ந்து வெளி நாடுகளுக்கு இடையேயான சர்வதேசிய விமான சேவைக்கான தடை வரும் ஜனவரி மாதம் 31ம் தேதி வரை நீட்டிக்கப்படும் என விமானத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
விமான சேவை
இந்தியாவில் கடந்த ஆண்டு முதல் நிலவி வரும் கொரோனா பரவல் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இடையே செல்லும் விமான போக்குவரத்து சேவையானது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. இந்த நோய் தொற்று சூழலுக்கு மத்தியில் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் மக்களுக்காக மட்டும் சில சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது. இதே போல மற்ற நாடுகளுக்கு இடையேயான வர்த்தக போக்குவரத்துக்காகவும் விமானங்கள் செயல்பட்டு வந்தன.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஓமைக்ரான் அச்சம்!
இதையடுத்து இந்தியாவில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததும் உள்நாட்டு விமான சேவைகளுடன், சில நாடுகளுக்கு இடையேயான சர்வதேச விமான சேவைகள் மீண்டுமாக துவங்கியது. இந்நிலையில் வரும் டிசம்பர் 15ம் தேதி முதல் அனைத்து நாடுகளுக்குமான விமான சேவைகளை துவங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அந்த வகையில் இன்னும் ஒரு சில நாட்களில் சர்வதேசிய விமான சேவைகள் துவங்க இருந்த நிலையில், கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு இந்தியாவிலும் சில தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் விஜே சித்ராவை நினைத்து வெளியிட்ட பதிவு – சோகத்தில் ரசிகர்கள்!
அதனால், நாடு முழுவதும் தற்போது நிலவி வரும் ஒமிக்ரான் வைரஸ் பரவலை கவனித்த மத்திய அரசு சர்வதேசிய விமான சேவைகளுக்கு மீண்டுமாக தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த தடையானது வரும் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் தேதி வரை தொடரும் என மத்திய விமானத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. ஏற்கனவே ஒமிக்ரான் பரவல் காரணமாக பல்வேறு நாடுகள் தங்களது எல்லைகளை மூடி, வெளிநாட்டு பயணிகளுக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.