தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்? ஓமைக்ரான் அச்சம்!
தமிழகத்தில் ஓமைக்ரான் என்ற மாறுபாடு அடைந்த கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சம் திடீரென அதிகரித்து உள்ள நிலையில் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா? என பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள்:
இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு பதிலாக, மாநில வாரியாக தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் தொழில் துறைகள் அதிகளவு பாதிப்புக்கு உள்ளாகவில்லை. முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி மற்றும் கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தி உள்ளது. மறுபுறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டது. அரசின் இத்தகைய நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்தது.
இதனால் மெல்ல இயல்பு நிலை திரும்பியது. தொழில்துறைகளும் முழுவீச்சில் செயல்பட தொடங்கின. எனவே பொதுமக்களும் கொரோனா தடுப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற தவறி விட்டனர். இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸின் மாறுபாடு அடைந்த ஓமிக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இது மிகவும் வீரியத்துடன் உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர். இதற்கிடையில் 20க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் சிலருக்கு ஓமிக்ரான் தொற்று உறுதியாகி உள்ளது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கண்ணன் விஜே சித்ராவை நினைத்து வெளியிட்ட பதிவு – சோகத்தில் ரசிகர்கள்!
இதன் மூலம் 3வது அலைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்டுகிறது. எனவே சில மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில விதிகளை அமல்படுத்தி உள்ளன. தமிழகத்திலும் ஓமிக்ரான் அச்சம் காரணமாக முழு ஊரடங்கு அமலாகுமா என்கிற அச்சம் எழுந்தது. இது தொடர்பாக அமைச்சர்கள் கூறுகையில், அடுத்து நடைபெற உள்ள ஊரடங்கு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து அப்போதைய நிலவரத்தின் படி முடிவு செய்யப்படும் என தெரிவித்தனர்.